39 வயசிலேயும் சின்ன பொண்ணு போல ஜிவ்ன்னு இருக்கேன்! யார பாத்து ஆண்டின்னு சொல்றீங்க..

Priyamani : தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை பிரியாமணி இவர் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டார் அதனைத் தொடர்ந்து பல்வேறு சிறந்த இயக்குனர்களுடன் படம் பண்ணினார் அப்படித்தான் அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படம் காதல் ஆக்ஷன் கலந்த படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் சென்றடைந்தது இதில் பிரியமணியின் எதார்த்தம் நடைபெறும் பலரையும் அழ வைத்தது இந்த படத்தின் மூலம் பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது அதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பட வாய்ப்புகள் ஒன்னு ரெண்டு தான் எட்டிப் பார்த்தன.

அந்த படங்கள் சுமாராக ஓடியதால் பிரியாமணி  மலையாள பக்கமே அதிகம் கவனம் செலுத்தினார் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விடாமல் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்த பிரியாமணிக்கு இப்பொழுது தான்  எட்டி பார்க்கின்றன கடைசியாக அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் படத்தில் ஒரு கைதியாக  நடித்திருந்தார்.

சினிமாவில் பிஸியாக ஓடும் நடிகை பிரியாமணி சோசியல் மீடியாவில் படும் ஆக்டிவாக இருக்கிறார் ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் இந்த நிலையில் பேட்டி ஒவ்வொன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அதில் அவர் சொன்னது..

priyamani
priyamani

இன்று நான் சினிமாவில் நடிப்பதற்கு காரணம் என்னுடைய கணவர் தான் எனக்கு 39 வயதாகிறது. அடுத்த ஆண்டு எனக்கு 40 வயது  ஆகிறது பலரும் ஆன்ட்டி என கிண்டல் அடிக்கிறனர் பலரும் பாடி ஷேமிங் செய்கிறார்கள் ஆனால் நான் இன்று வரை பிட்டாக தான் இருந்து வருகிறேன் என பதிலடி கொடுத்துள்ளார் பிரியாமணி.