கோடிக்கணக்குல காசு சம்பாரிச்சு என்ன பிரயோஜனம்.. ப்ரியா பவானி சங்கருக்கு தூங்கக்கூட இடம் கிடைக்கல.. புகைப்படத்தை பார்த்து கழுவி ஊத்தும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் முதலில் சின்னத்திரையில் பிரபலமடைந்து பின் வெள்ளித்திரை பக்கம் என்ட்ரி கொடுத்தார் முதலில் இவர் “மேயாத மான்” என்னும் திரைப்படத்தில் நடித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் அதன் பிறகு இவர் நடித்த ஒவ்வொரு படமும்..

நல்ல வெற்றியை ருசித்ததால் தற்பொழுது வருடத்திற்கு குறைந்தது ஆறு, ஏழு படங்களில் நடிக்கிறார் இதனால் நயன்தாரா, சமந்தாவுக்கு அடுத்து அதிக படங்களில் நடிக்கும் நடிகை என்ற அந்தஸ்தை இவர் பெற்றிருக்கிறார். அந்த வகையில் இந்த வருடத்தில் கூட இன்னமும் 5, 6 படங்கள் இருக்கின்றன.

அதன் படி பத்து தல, ருத்ரன், டிமான்டி காலனி 2, பொம்மை, இந்தியன் 2 போன்ற படங்கள் இருக்கின்றன இது தவிர தெலுங்கில்  ஒரு படம் பண்ணி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி ஓடிக்கொண்டிருக்கும் இவர் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என  பிரபல பத்திரிக்கையாளரும், நடிகருமான பயில்வான்  ரங்கநாதன் அண்மையில் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

அதற்கு ஏற்றுவது போல நடிகை பிரியா பவானி சங்கர் தொடர்ந்து வெளியிடும் புகைப்படங்களும் அதைத் தான் உறுதிப்படுத்துகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர்  வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போய் உள்ளனர். இரும்பு கம்பில் வெறும் கயிறு மட்டும் கட்டி அதில் ப்ரியா பவானி சங்கர் தூங்கும் புகைப்படம் தான் இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரிஸ்க் எடுக்கலாம் ஆனால் இந்த அளவுக்கா இதெல்லாம் ரொம்ப ஓவர் மேடம் இப்படியெல்லாம் பண்ணாதீங்க உங்கள் கையில் ஏகப்பட்ட படங்கள் இருக்கிறது என கூறி அவருடைய ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ நடிகை பிரியா பவானி சங்கர் தூங்கும் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

priya-bhavani-shankar-
priya-bhavani-shankar-

Leave a Comment

Exit mobile version