சிம்புவின் ஈஸ்வரனை தொடர்ந்து முன்னணி நடிகரின் திரைப்படத்தை கைப்பற்றிய நிதி அகர்வால்.!

தெலுங்கு சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பல நடிகைகள் உள்ளார்கள்.அந்த வகையில் ஒருவர் தான் நடிகை நிதி அகர்வால். இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து தமிழில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பூமி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து தற்போது இவர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இத்திரைப்படம் பெரிதாக வெற்றிபெறவில்லை என்றாலும் நிதி அகர்வால் இருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.  அதன்பிறகு இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

இந்நிலையில் இவருக்கு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மகிழ்ந்திருமேனி இயக்கத்தில் முன்னணி நடிகரான உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தெலுங்கில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் மகேஷ்பாபுவின் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இத்திரைப் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க உள்ளாராம்.

அந்த வகையில் இத்திரைப்படத்தை திரிவிக்ரம் இயக்கவுள்ளார்.தற்பொழுது நிதி அகர்வால் தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து வரும் ஹரிஹர வீரமல்லு என்ற சரித்திர திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

Leave a Comment