நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது நடிகை நீலிமா செய்த செயல்..! இணையத்தில் குவியும் லைக்குகள்..!

கடந்த இரண்டு வருடங்களாக தமிழ்நாடு மட்டுமின்றி உலகத்தில் பல்வேறு பகுதிகளிலும்  கொரோனாவின் தாக்கமானது தலைவிரித்து ஆடுகிறது இதன் காரணமாக பல்வேறு  மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த வைரஸ் தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு புதுப்பிக்கப்பட்டு பல்வேறு தரப்பு மக்களும் பெரும் கஷ்டத்திற்கு ஆளானார்கள்.

இவ்வாறு இந்த ஊரடங்கு தளர்வு பின் இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த தடுப்பூசியை அனைவரும் கட்டாயம் போட வேண்டுமென  தமிழக அரசு தெரிவித்தது மட்டுமல்லாமல் இதனை பல்வேறு மகள்களும் பரிந்துரை செய்து வருகிறார்கள்.

மேலும் இந்த தடுப்பூசியை கர்ப்பிணிப்பெண்கள் போடுவதற்கு மிகவும் பயப்படுகிறார்கள் என கூரி உள்ளார்கள் இதற்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் நடிகை நீலிமா ராணி தான் கர்ப்பமாக இருக்கும் போது தடுப்பூசி போட்டுக் கொண்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறியது என்னவென்றால் முதலில் நானும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மிகவும் பயந்தேன் ஆனால் மூன்று மாதம் இருக்கும் போது கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என என்னிடம் கூறினார்கள்  ஆனால் முதலில் எனக்கு பயமாக தான் இருந்தது பின்னர் எனக்கு தெரிந்த மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்ட பிறகு எனக்கு புரிய வைத்தார்கள்.

பின்னர் தன்னுடைய ஐந்தாவது மாதத்தில் நான் கோவைட் தடுப்பூசி போட்டுக் கொண்டேன் இன்றைக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. ஊசி போட்டதன்பிறகும் நான் நன்றாக தான் இருக்கிறேன். ஆகையால் கர்ப்பிணிப் பெண்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.

இவ்வாறு இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்வதன் மூலமாக உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் தான் பயன். என சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை மூலம் பகிர்ந்துள்ளார்.

neelima rani-1
neelima rani-1

Leave a Comment