தாத்தா கூட வெளியில போறீங்களா என தன்னுடைய கணவரை பற்றி பேசுறாங்க.! கண் கலங்கிய நடிகை நீலிமா ராணி..

என் புருஷனை பார்த்து தாத்தாவானு கேட்கறாங்க என ரசிகர்களின் கேள்விகளை நினைத்து நடிகை நீலிமா ராணி கண்கலங்கி இருக்கும் நிலையில் அது குறித்து சமீப பேட்டி அளித்துள்ளார். அதாவது குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமான இவர் பிறகு தொடர்ந்து சில திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் அதன் பிறகு தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தை நான் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.

இவர் தேவர்மகன் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். மேலும் இதனை அடுத்து சின்னத்திரையில் மெட்டி ஒலி, கோலங்கள், தென்றல், வாணி ராணி, தாமரை, தலையணை பூக்கள் போன்ற பல தொடர்களிலும் நடித்து வந்த நிலையில் தற்பொழுது வெளியான ஆகஸ்ட் 16, 1947 என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் இவருடைய காட்சிகள் வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் அனைவரும் இவருடைய நடிப்பை பாராட்டி வருகிறார்கள். இந்த படத்தில் நீலிமா ராணி கௌதம் கார்த்தியின் அம்மாவாக நடித்து இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த இவர் பல தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.

அந்த வகையில் இந்த படத்திற்காக பொன் குமார் என்னை அழைத்த போது படத்தின் முக்கியமான கதாபாத்திரம் இந்த படம் வெளியாகும் பொழுது நிச்சயம் அனைவரும் உங்களை பாராட்டுவார்கள் என்றார். உடனே எத்தனை நாள் கால்ஷீட் வேணும் என்று கேட்டேன் ஒரு நாள் போதும் என்றார். அதனைக் கேட்டதும் ஒரு நாளில் என்னை எடுப்பீங்க என்று ஆச்சரியமாக கேட்டேன்.

ஆனால் அவர் அரை நாளிலேயே அந்த காட்சியை எடுத்து முடித்து விட்டார்.. எனக்காக காத்திருந்தார். அதாவது நான் கர்ப்பமாக இருந்த பொழுது போட்டோஷூட் நடத்தி இருந்தேன் அதை பார்த்த பொன்குமார் சாருக்கு இந்த மாதிரி ஒரு முகம் வேண்டும், லட்சணமான முகம் வேண்டும், அம்மா என்று சொன்னது மனதிற்குள் ஒரு தாக்கம் வரவேண்டும் என்பதற்காக எனக்கு குழந்தை பிறக்கும் வரை காத்திருந்தார்.

இதனைக் கேட்டவுடன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது இந்த பாராட்டுகளை கேட்கும் பொழுது ஏதோ சாதித்தது போன்ற உணர்வு இருப்பதாக கூறியுள்ளார். மேலும் இதனை அடுத்து என் கணவரின் புகைப்படத்தை பார்த்து தாத்தாவா.. அப்பாவா.. தாத்தா கூட வெளியில போறீங்களா என்று கேட்கிறார்கள்.

என் கணவர் சால்ட் அண்ட் பேப்பர் தான் மற்றவர்களுக்காக டை அடித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று அவருக்கு விருப்பமில்லை நானும் விரும்பவில்லை ரியலாக எப்படி இருக்க முடியுமோ அப்படி இருக்கிறார். இதனால் யார் எந்த கருத்தை தெரிவிப்பதாக இருந்தாலும் அந்தக் கருத்தை தன்னை முன்வைத்தும் தன்னுடைய சந்ததியை முன்வைத்து பதிவு செய்ய வேண்டும் என்றார்.

Leave a Comment