கரண்ட் ஒயரை பிடித்து ரசிகர்களை சூடேத்தி விட்ட நீலிமா ராணி.! டபுள் மீனிங்கில் கலாய்க்கும் ரசிகர்கள்

நடிகை நீலிமா ராணி சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தாவர்,  சினிமாவில் மட்டும் அல்லாமல் சின்னத்திரையிலும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தனது அசால்ட்டான நடிப்பு வெளியிட்டு தம்முடைய மார்க்கை ஸ்கோர் செய்வார்.

இந்த நிலையில் நீலிமா ராணி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கினார் இவர் தேவர்மகன், விரும்புகிறேன், பாண்டவர் பூமி ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

ஒரு காலத்தில் ஆறு மணி ஆகிவிட்டால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து மெட்டி ஒலி சீரியல் பார்த்தால்தான் தூக்கம் வரும் அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நீலிமாராணி.

பொதுவாக நீலிமா ராணி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் தான் அதிகமாக நடித்திருப்பார் ஏனென்றால் இவர் முக பாவனை அனைத்தும் வில்லி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும்.

neelima-rani
neelima-rani

சீரியலில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் சினிமாவில் இவர் நடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இன்னும் குறையவில்லை, சின்னத்திரையில் வில்லியாகவும், காதலியாகவும், மனைவியாகவும் தாயாகவும் என பல கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி பெற்ற இவர் தற்போது தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார்.

neelima-rani
neelima-rani

இந்த நிலையில் சமீபத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட் சமூக வலைதளத்தில்  மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த நிலையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் கரண்ட் ஒயரை பிடித்தபடி போஸ் கொடுத்துள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் பார்த்து பத்திக்க போகுது என டபுள் மீனிங்கில் கலாய்த்து வருகிறார்கள்.

neelima-rani
neelima-rani

Leave a Comment