எதிர்பாராத நேரத்தில் வெளியாகி இணையதளத்தை கதரவிடும் நயன்தாராவின் மலையாள படத்தின் புகைப்படம்.!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டார். திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜி, மௌவுலி, ஊர்வசி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் என். ஜே. சரவணன் உடன் இணைந்து ஆர்ஜே பாலாஜி யும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இவரது காதலன் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. மேலும் இவர் ரஜினியுடன் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதேசமயம் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இதனையடுத்து நடிகை நயன்தாரா மலையாளத்தில் ஹீரோ குஞ்சுக்கோ போபனு டன். இணைந்து நிழல் என்ற படத்திலும் நடித்து கொண்டு வருகிறார். இந்தப்படம் எர்ணாகுளத்தில்  ஒரு சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

அப்பொழுது பீச்சில் நடைபெற்ற சூட்டிங்கின்போது இருந்து புகைப்படங்கள் இணையதளத்தில் வெளி வந்துள்ளது. அந்தப் புகைப்படத்தில் நயன்தாராவும் குஞ்சு கோபமனும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நயன்தாராவுக்காக அதிகம் லைக், ஷேர் போன்ற விஷயங்களை பண்ணி கொண்டு வருகிறார்கள்.

nayanthara
nayanthara

Leave a Comment