திருமணத்திற்கு பச்சை கொடி காட்டிய நயன்தாரா.!! சந்தோஷத்தில் குதிக்கும் விக்னேஷ் சிவன்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. தற்போது சமூக வலைதளத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராதான் மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறார்கள்.

சில தினங்களுக்கு முன்பு பிரபல பத்திரிகையாளர் ஒருவர் விக்னேஷ் மற்றும் நயன்தாராவின் காதல் இன்னும் ஒரு வருடத்திற்கு தாக்குப் பிடிக்காது என்று சொல்லி சர்ச்சையை ஏற்படுத்தினார்.அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நயன்தாரா  இன்னும் சில காலத்தில் திருமணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நயன்தாராவின் மீது காதல் சர்ச்சைகள் ஏகப்பட்டது இருந்தாலும் கண்டிப்பாக விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்ளவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தார்கள் அதுபோலவே நயன்தாரா விக்னேஷ் சிவனை விரைவில் திருமணம் செய்ய உள்ளார்.

இவர் நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்திற்கு பிறகு கடவுள் மற்றும் ஜோதிடத்தின் மீது நயன்தாராவிற்கு அளவுகடந்த நம்பிக்கை வந்து விட்டதாம். எனவே ஜோதிடர் எது சொன்னாலும் அதனை மறுக்காமல்  செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறாராம்.

அந்த வகையில் ஜோதிடர் ஒருவர் விக்னேஷ் சிவனை விட வேறு எந்த ஆணாலும் உன்னை புரிந்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளாராம். எனவே நயன்தாரா விக்னேஷ் சிவனை தன் கணவனாக ஏற்றுக் கொள்ளலாம் என்று உடனடியாக திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளாராம்.

இந்நிலையில் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளவோமா என்று கனவு கண்டு கொண்டிருந்த விக்னேஷ் சிவனுக்கு கனவு பலிக்கும் வகையில் மார்ச் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியில் திருமணம் செய்துகொள்ள உள்ளார்களாம். இந்த முறையாவது இவர்கள் திருமணம் செய்து கொள்வார்களா என்று பார்ப்போம்.

Leave a Comment