ஆள் பார்த்து நடந்து கொள்ளும் நடிகை நயன்தாரா..! இதெல்லாம் எந்த விதத்தில் நியாயம்..?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா இவர் பிரபலமான நமது நடிகையை லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பது மட்டும் இல்லாமல் தானே ஹீரோயினாக ஒரு சில திரைப்படங்களில் நடித்து மாபெரும் வெற்றி கண்டுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ரவுடி பிக்சர் தயாரித்த நிறுவனத்தின் மூலமாக காத்துவாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய்சேதுபதி மட்டுமல்லாமல் மற்றொரு கதாநாயகியாக நடிகை சமந்தா நடித்து இருப்பார்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் இவர் தயாரிப்பில் உருவான பல படங்களுமே நல்ல வசூலை பெற்று கொண்டு வருகிறது.  இவ்வாறு அவருடைய தயாரிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் மட்டும் எப்படி இந்தளவு ஹிட் அடிக்கிறது என்பது பலரின் கேள்வியாக அமைந்து விட்டது.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தன்னுடைய தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்திற்கும் தனது ஆசைக் காதலன் இயக்கும் திரைப்படங்களுக்கும் பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா கலந்து கொண்டு வருகிறார்.

ஆனால் மற்ற தயாரிப்பாளர்கள் திரைப்படம் என்றால்  நடிகை நயன்தாரா ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது கிடையாது இவ்வாறு நயன்தாரா சுயநலமாக இருப்பதை பார்த்து பலரும் வியந்து போய் விட்டார்கள்.

மேலும் இனி வரும் காலகட்டத்தில் ஆவது நடிகை நயன்தாரா புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது அதுமட்டுமில்லாமல் தன்னுடைய திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் போது இனிமேல் நயன்தாரா புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தான் ஆக வேண்டும் என தயாரிப்பாளர்கள் பிடிவாதத்தில் இருந்தால் இவை மாறிவிடும் என கூறுகிறார்கள்.

Leave a Comment