விஜய் சேதுபதிக்காக மூன்று நாட்கள் சென்னையில் காத்திருந்த நயன்தாரா..! எதற்காக தெரியுமா..?

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி இவர் சினிமாவில் பிசியான நடிகராக இருப்பது மட்டுமல்லாமல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பிஸியாக இருந்து வருகிறார் இந்நிலையில் அவர் ஹீரோவாக கலக்கியது மட்டுமல்லாமல் தற்போது வில்லன் கேரக்டரிலும் வெளுத்து வாங்கி வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவருடைய நடிப்பை பார்த்து வியந்த தயாரிப்பாளர்கள் பலரும் இவரை வைத்து படம் இயக்க ஏக்கத்துடன் இருப்பது மட்டுமல்லாமல் பல பட வாய்ப்புகளையும் குவித்து விட்டார். இந்நிலையில் ஒரே சமயத்தில் இரண்டு அல்லது மூன்று திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த நமது விஜய் சேதுபதி தற்போது 10 திரைப்படத்திற்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதன் காரணமாக நடிகர் விஜய் சேதுபதிக்கு இந்த திரைபடத்தில் எப்பொழுது நடிப்பது என்ற குழப்பம் உருவானது மட்டுமல்லாமல் தேதி ஒதுக்கி அதிலும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வரும்  விஜய் சேதுபதி  நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவருடனும் நடித்து வருகிறார்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆனது மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பது மட்டுமல்லாமல் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் 5 நாள் 10நாள் என நாட்களை ஒதுக்கி வருகிறாராம் விஜய் சேதுபதி. இந்நிலையில் பொன்ராமோ இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

அப்போது படப்பிடிப்பு தளத்தில் கூடுதலாக மூன்று நாட்கள் கொடுத்தால் நான் படத்தை முடித்து விடுவேன் என்று கூறியதும் விஜய் சேதுபதியும் சம்மதம் தெரிவித்தாராம் ஆனால் அந்த மூன்று நாட்கள் அவர் காத்து வாரத்துல ரெண்டு காதல் என்ற திரைப்படத்திற்கு ஒதுக்கிய தேதியாம் ஆகையால் இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு வந்த நடிகை நயன்தாரா மூன்று நாட்கள் விஜய் சேதுபதிக்காக காத்திருந்து நடித்துக் கொடுத்தாராம்.

vijaysethupathi-1

Leave a Comment

Exit mobile version