லோகேஷ் படத்திலிருந்து விலகிய நயன்தாரா.! குழப்பத்தில் ராகவா லாரன்ஸ் படக்குழு..

Nayanthara: நடிகை நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் இறைவன் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார். இறைவன் படத்திற்கு முன்பு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் இந்த படம் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இவ்வாறு இதனை தொடர்ந்து மண்ணாங்கட்டி, சீன்ஸ் 1960 உள்ளிட்ட சில திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நயன்தாரா தயாரிப்பாளராகவும் பிசியாக இருந்த வருகிறார். லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கும் நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமாகி இருக்கும் நயன்தாரா சர்வதேச அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். இதனை அடுத்து சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் தமிழில் வெளியான இறைவன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவை விமர்சனத்தை பெற்று வருகிறது.

இறைவன் சைக்கோ திரில்லர் படமாக அமைந்திருந்தாலும் எதற்காக ஹீரோ சைக்கோவாக மாறுகிறான் என்பதே சொல்லாமல் கதை எடுக்கப்பட்டு இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த படத்தினை தொடர்ந்து மண்ணாங்கட்டி,சின்ஸ் 1960 போன்ற லோகேஷ் கனகராஜ் தயாரிக்க இருக்கும் படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் தயாரிக்க இருக்கும் இப்படத்தில் உதவி இயக்குனராக ரத்னகுமார் கமிட் ஆகியுள்ளாராம். இப்படத்தில் லாரன்ஸ்க்கு நயன்தாரா ஜோடி ஆகவில்லை என்றும் சாதாரணமான கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்பொழுது இந்த படத்தில் இருந்து நயன்தாரா விலகி உள்ளாராம் எனவே பட கதையை மாற்ற படக் குழுவினர்கள் முடிவெடுத்து இருப்பதாகவும் மேலும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் ஷூட்டிங் அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.