கடற்கரையில் ஜிகுஜிகு உடையில் நயன்தாரா.! புத்தாண்டை என்னம்மா கொண்டாடியுள்ளார்.! வைரலாகும் புகைப்படங்கள்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா, இவரை அனைவரும் லேடி சூப்பர்ஸ்டார் என்று தான் அழைப்பார்கள், அழகான தோற்றமும் திறமையும் கொண்ட இவரை எவர் கிரீன் நடிகை என்று கூட அழைக்கிறார்கள்.

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் 2005 ஆம் ஆண்டு சரத்குமாருடன் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இவர் சமீபகாலமாக சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார் தமிழ் சினிமாவிற்கு, அதுமட்டுமில்லாமல் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

nayanthara
nayanthara

மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகை இவர்தான், நடிகை நயன்தாரா முன்பு சில திரைப்படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து இருந்தாலும் சமீப காலமாக கதைக்கு ஏற்ற கதாபாத்திரத்தின் மட்டுமே நடித்து வருகிறார். நயன்தாரா நடித்து வெளியாகிய பிகில் திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து சூப்பர் ஸ்டாருடன் தர்பார் படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வருகிற பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது, இந்த நிலையில் நடிகை நயன்தாரா கடந்த சில நாட்களாக தனது காதலருடன் கோவில் கோவிலாக சுற்றி வருகிறார். அதுமட்டுமல்லாமல் அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார், மேலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் உலகம் முழுவதும் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது, நடிகை நயன்தாராவும் கடற்கரையில் ஜிகுஜிகு ஆடையில் படு கிளாமராக புத்தாண்டை கொண்டாடி உள்ளார் அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார் இதோ அந்த புகைப்படங்கள்.

nayanthara

Leave a Comment