புதுமுக இயக்குனர் திரைப்படத்தில் நடிக்க உள்ள முன்னணி நடிகை நயன்தாரா.! அதுவும்,எப்படிப்பட்ட திரைப்படம் தெரியுமா.?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் நடிகை நயன்தாரா.இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் தென்னிந்திய சினிமாவில் கலக்கி வருகிறார். அதோடு தொடர்ந்து கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களிலும்,கமர்ஷியல் ஹீரோயினாகவும் கலக்கி வருகிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓடிடி வழியாக வெளிவந்தது. இதனை தொடர்ந்து மலையாளத்தில் நிழல் திரைப்படம் வெளிவந்தது இத்திரைப்படத்திற்கு பிறகு ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த திரைப்படம் மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் நயன்தாரா அடுத்து இரண்டு திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. முதலில் இவர் தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது ஆனால் அந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. தற்பொழுது அதிகாரப்பூர்வமான தகவல்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது தமிழில் அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களையும் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி பிள்ளை தயாரிக்க உள்ள திரைப்பங்களில் நடிக்கவுள்ளார் என்றும் புதுமுக இயக்குனர் விப்பன் என்பவர் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

அதோடு இத்திரைப்படம் சைக்காலஜிக்கள் மிஸ்டரி த்ரில்லர் திரைப்படமாக உருவாக உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் மற்றொரு திரைப்படத்தை யார் இயக்குகிறார் மற்றும் எப்படிப்பட்ட திரைப்படம் என்பது பற்றிய எந்த தகவலும் தெரியவில்லை. இதனை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

Leave a Comment