தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அதோடு சமீப காலங்களாக இவர் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில் இதற்குமேல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் மட்டும் தான் நடிப்பதாக முடிவெடுத்துள்ளாராம் இதன்காரணமாக ரசிகர்களும் இதற்கு மேல் நயன்தாரா நடிகர்களுடன் டூயட் பாடும் காட்சிகளை இதற்குமேல் பார்க்க முடியாது என்றெல்லாம் கூறி வந்தார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் இவர் நடிப்பில் கடைசியாக மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓடிடி வழியாக வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இத்திரைப்படத்தினை தொடர்ந்து இவர் நடிப்பில் நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது இதற்கு அடுத்ததாக தீபாவளியை முன்னிட்டு ரஜினிக்கு ஜோடியாக இவர் நடித்து முடித்துள்ள அண்ணாத்த திரைப்படமும் வெளியாக உள்ளது.
அதோடு தெலுங்கிலும் சில திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர் மலையாளத் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தினை பிரேமம் திரைப்படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்கவுள்ளார். அதோட இத்திரைப்படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக பகத் பாசில் நடிக்க உள்ளார்.
இத்திரைப்படம் காதலை மையமாக வைத்து உருவாக இருப்பதாக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார். அதோடு இத்திரைப்படத்தில் இவர் தான் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் முதன் முறையாக இசை அமைக்க உள்ளார் காதலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு பாடல்களுக்கு முக்கியத்துவம் தரும் படமாக இருக்குமாம். அந்தவகையில் இப்படத்தில் மொத்தம் பதினோரு பாடல்கள் இடம்பெற உள்ளதாக கூறுகிறது. விரைவில் இப்படத்தின் சூட்டிங் தொடங்கும் என்றும் கூறியுள்ளார்கள்.