சோகத்தில் மூழ்கிய நயன்தாரா.! புகைப்படத்தால் குழம்பிப் போய் நிற்கும் ரசிகர்கள்.

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பொதுவாகவே இவர் ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் இவர் தற்போது சமந்தா. விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை அவரது காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் இயக்கி வருகிறார்.

பின்னர் அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் நிழல் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

மேலும் தற்போது இந்த திரைப்படத்திலிருந்து சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அந்தப் புகைபடங்களில் நயன்தாரா மிக சோகமாக உள்ளார் அதாவது இந்த திரைப்படத்தில் இவர் ஆறு வயது ஆண் குழந்தைக்கு தாயாக நடித்து உள்ளார் என்பது இந்த ட்ரைலரை பார்த்து தெரியவந்தது. இத்திரைப்படத்தில் இவர் பெரும்பாலும் பல காட்சிகளில் மிக சோகமாகவே உள்ளார். இதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் ஒரு திகில் கலந்த மிஸ்டரி திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்னதான் இவர் சோகமாக நடித்திருந்தாலும் அவரது அழகு, லுக், கெத்து குறையாமல் நடித்து ரசிகர்களிடம் இந்த திரைப்படத்தினை பற்றிய ஆர்வத்தை தூண்டி உள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.

nayyanthara
nayan5
nayan3

 

nayantharani
nayanthrA2
nayanthara24

Leave a Comment

Exit mobile version