தனக்கு நெருக்கமானவருக்கு ராக்கி கயிறு கட்டி ரக்ஷாபந்தன் கொண்டாடிய நடிகை நயன்தாரா.! வைரலாகும் வீடியோ..

நேற்று ரக்ஷா பந்தன் என்பதால் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு நடைபெற்று வருகிறது மேலும் பலரும் தங்கள் சகோதர சகோதரிகளுக்கு ராக்கி கயிறு கட்டி இந்த கொண்டாட்டத்தை கொண்டாடி வருகின்றனர். மேலும் இது குறித்து பலரும் சோசியல் மீடியாவில் தங்களது புகைப்படங்கள் வெளியிட்டும் வருகிறார்கள்.

முக்கியமாக ஏராளமான திரை பிரபலங்கள், பாலிவுட் திரை பிரபலங்கள் தங்களது சக நடிகர் நடிகைகளுக்கு ராக்கி கயிறு கட்டி புகைப்படங்களை இணையதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இந்த வகையில் நடிகை நயன்தாராவும் ஒரு பெண்ணுக்கு ராக்கி கயிறு கட்டுவதும் அந்தப் பெண்ணுக்கு நயன்தாராக்கு கயிறு கட்டுவதும் காட்சிகள் வீடியோவாக சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வருபவர் தான் நயன்தாரா இவர் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார் சமீப காலங்களாக கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இப்படிப்பட்ட நிலை தற்பொழுது ஷாருக் கானின் ஜவான், பிரித்திவிராஜ் நடிக்கவுள்ள ‘கோல்டு ‘, சிரஞ்சீவியின் காட்பாதர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் நடிகை நயன்தாராவின் 75வது திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது. மேலும் இந்த திரைப்படத்தினை இயக்குனர் சங்கத்தின் உதவியாளர் நீல் கிருஷ்ணா என்பவர் இயக்கக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் ஜெய் மற்றும் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு தொடர்ந்து நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் இவருக்கு சமீபத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலைகள் பிறகு சில மணி நேரங்களிலேயே டிசார்ஜ் செய்யப்பட்டார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Comment