தான் நடித்த முதல் பாடல் காட்சியில் நதியா எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! இணையதளத்தில் ட்ரெண்டான புகைப்படம்.

தமிழ் சினிமாவில் தமிழ் சினிமாவில் 80, 90களில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் நடிகை நதியா. அப்போதுள்ள நடிகைகளில் வாகான உடலமைப்பு, அழகு, நடிப்பு திறமை, நடனம் என ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் இவரே.

எனவே இவரை 80களின் கனவுக்கன்னி என அழைத்து வந்தனர் அப்போது விற்கும் பொருட்களான வளையல், கொலுசு என அனைத்திற்கும் இவரின் பெயரை சொல்லியே பெண்கள் வாங்குவார்கள், அந்த அளவிற்கு இவர் பிரபலமானவர்.

இவர் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான பின்னர் ரஜினி உட்பட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து பிரபலமானார்.

இந்நிலையில் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதலில் நடித்த மலையாள திரைப்படமான நோக்கெத்தே தூரத்து கண்ணும் நட்டு என்ற
இந்த திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க அறிமுகமானதாகவும் இந்த திரைப்படத்திற்காக ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த படத்திற்காக எடுக்கப்பட்ட முதல் போட்டோவை தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களிடம் லைக்குகளை பெற்று வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் இப்பொழுதும் இவர் கொஞ்சம் கூட அழகு மாறாமல் அப்படியே உள்ளதால் ரசிகர்களுக்கு இன்னும் அவரை பிடித்துள்ளது. இதோ அந்த புகைப்படம்.

nadiya2
nadiya2

Leave a Comment