அடுக்கடுக்காக குவியும் வழக்குகள்..! காவல்துறை அதிகாரியின் காலை பிடித்து கதறும் நடிகை மீரா மிதுன்..!

சமீபகாலமாக சர்ச்சையை தன்னுடைய ஜோல்னா பையில் மாட்டிக் கொண்டு திரியும் ஒரு நடிகை என்றால் அது மீராமிதுன் தான் இவர் தன்னை தானே சூப்பர் மாடல் என்று சொல்லிக் கொள்வார். இவ்வாறு பிரபலமான நமது மீரா மிதுன் மாடலிங் துறையில் பல்வேறு சிக்கல்களில் ஈடுபட்டு வெளியேறியவர்.

அதன் பின்னர் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கு ஓரளவுக்கு ரசிகர்களை கவர்ந்து விடலாம் என்ற எண்ணத்தில் நுழைந்தார் ஆனால் அங்கு அவருடைய பழைய கதைகளை தோண்டி எடுத்ததன் காரணமாக பாதியிலேயே வீட்டைவிட்டு ஓடிவிட்டார்.

இவ்வாறு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு பித்து பிடித்ததோ என்னவோ தெரியவில்லை பிரபல முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் சூர்யா ஆகியவர்களின் குடும்பத்தைப் பற்றி பேசுவது மட்டுமல்லாமல் அவர்களை பற்றியும் தரக்குறைவாக பேசி ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார்.

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் பல ஆண் நபர்களுடன் இணைந்து கொண்டு படு மோசமான செயல்களில் ஈடுபடுவது மட்டுமல்லாமல் அவற்றை புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு தன்னை தானே கேவலப் படுத்திக் கொள்கிறார்.

இந்நிலையில் தன்னுடைய சமூகத்தினரை மிக கேவலமாக பேசி சர்ச்சையில் மாட்டிக் கொண்ட நமது நடிகை முடிந்தால் கைது செய்து பாருங்கள் என்று சவால் விட்டுள்ளார் இதனால் கோபம் அடைந்த தமிழக காவல்துறை அதிகாரிகள் அவரை கேரளாவில் கொத்தாக தூக்கி விட்டார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த விசாரணையில் நான் தெரியாமல் பேசிவிட்டேன் என்னை விட்டுவிடுங்கள் என்று கதறி அழுவது மட்டுமல்லாமல் நான் இனிமே தன்னுடைய வீட்டை விட்டு கூட வெளியில் வர மாட்டேன் என காவல்துறை அதிகாரிகளிடம் கெஞ்சுயுள்ளார்.

meera mithun-11

இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் மீரா மிதுன் மீது பல கேவலமான செயல்கள் செய்ததன் மூலமாக பல்வேறு வழக்குகளைப் போட்டு அவரை ஒரேடியாக உள்ள தள்ள போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

Leave a Comment

Exit mobile version