மீரா ஜாஸ்மின் வாழ்க்கையில் சடுகுடு விளையாடிய இருவர்.! வாழ்க்கை என்ன ஆனது தெரியுமா.!

பொதுவாக நடிகைகள் என்றால் குறிப்பிட்ட காலம் வரை மட்டும் தான் அவர்களால் முன்னணி நடிகைகளாக வலம் வர முடியும். தங்களது இளமை குறைந்ததும் அம்மா மற்றும் துணை நடிகைகளாக தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். இது ஒருபுறம் இருந்தாலும் இன்னும் சில நடிகைகள் தங்களது சொந்த பிரச்சனையினால் சினிமாவை விட்டு விலகி விடுவார்கள்.

அந்தவகையில் நடித்த சில படங்களிலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து பிரபலமடைந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின்.  இவர் தெலுங்கில் பல படங்கள் நடித்துள்ளார். பிறகு விஷால் நடிப்பில் வெளிவந்த சண்டக்கோழி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அந்த வகையில் இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு, தமிழ் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அஜீத், விஜய் என்று இன்னும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இதற்குப் பிறகு தான் இவரின் வாழ்க்கையில் எமகண்டம் ஆரம்பித்தது.  இந்நிலையில் திடீரென்று இவர் மாண்டலின் ராஜேஷ் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக 2008ஆம் ஆண்டு தெரிவித்தார்.

இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அனைவருக்கும் ஆச்சரியத்தைத் தரும் வகையில் வெளிநாட்டை சேர்ந்த ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஜான் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார்.

இவ்வாறு திருமணம் செய்ய உள்ளதாக ஒருவரின் பெயரை கூறி விட்டு திடீரென்று வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. இந்நிலையில் மீரா ஜாஸ்மின் தனது கணவரான ஜானுடன் சில காலங்கள் மட்டுமே ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்தார். பிறகு இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள்.

இந்நிலையில் மீரா ஜாஸ்மினுக்கு தற்போது 39 வயதாகும் நிலையில் இதற்குமேல் திருமணத்தில் ஆர்வம் செலுத்த வேண்டாம் என்று மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் இரண்டு திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில் தொடர்ந்து இவர் அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment