திருமணமானவர் என தெரிந்தும் காதலித்து பிறகு நைசாக கழட்டி விட்ட நடிகை மீனா.! இவரையும் விட்டு வைக்காத பிளேபாய் நடிகர்..

பிரபல நடிகை மீனா ஒருவரை காதலித்து வந்த நிலையில் பிறகு அவர் பிளேபாய் என தெரிந்தவுடன் கழட்டி விட்டு விட்டு தன்னுடைய வேலையை பார்க்க ஆரம்பித்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக பலம் வந்த நடிகை மீனா ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தார் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமான இவர் பிறகு ஹீரோயினாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த நெஞ்சங்கள் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமான இவர் இதனை அடுத்து ரஜினிகாந்த் உடன் இணைந்து எங்கேயோ கேட்ட குரல், அன்புள்ள ரஜினிகாந்த் உள்ளிட்ட 20 இருக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிறகு ஹீரோயினாக நடித்த தொடங்கி உள்ளார்.

அந்த வகையில் தெலுங்கில் 1990ஆம் ஆண்டு வெளிவந்த நவயுகம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் மீனா. இதனை அடுத்து பிறகுதான் தமிழ் திரைப்படங்களில் ஹீரோயினாக நடிப்பதை தொடங்கினார். அந்த வகையில் ரஜினி, மீனா இவர்களுடைய காம்போவில் வெளியான அனைத்து படங்களும் வசூல் வேட்டையை நடத்தியது.

தமிழ் சினிமாவில் 40 ஆண்டு காலங்களாக இருந்து வரும் மீனா பல சர்ச்சைகளிடம் சிக்கி உள்ளார். அந்த வகையில் மீனாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஏராளமான பிரபலங்கள் மீனாவுக்கு வலை விரித்து பார்த்த போதிலும் எதிலும் சிக்காமல் தன்னுடைய பெற்றோர் சொன்ன மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் திருமணத்திற்கு முன்பு இவர் திருமணமான நடிகரை காதலித்து கழட்டி விட்டதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அதாவது நடிகர் பிரபுதேவா உடன் இணைந்து மீனா டபுள்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது பிரபுதேவாவை மீனாவிற்கு பிடித்துப் போக அவர் திருமணமானவர் என தெரிந்தும் காதலித்து வந்துள்ளார். இவர்களுக்கிடையே காதல் முத்தி போவதற்குள் மீனாவின் தோழிகள் சிலர் அவர் ஒரு பிளேபாய் அனைத்து நடிகைகளுடனும் இப்படி தான் பேசுவார், பழகுவார் எனக் கூறியதால் மீனா நைசாக கழட்டி விட்டதாக கூறப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version