தனது ஆசையை நிறைவேற்றாமலே மறைந்த நடிகை மனோரமா.! இவருக்கு இப்படி ஒரு ஆசை இருந்ததா என விஷயத்தை கேட்டு அதிர்ந்து போன ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட நூறு திரைப்படங்களில் நடித்த பல பிரபலங்களையும் ரசிகர்கள் உடனே மறந்து விடுகிறார்கள் ஆனால் அந்த காலகட்டங்களில் 1000 திரைப்படங்களில் நடித்த நடிகர்கள்,நடிகைகளை மக்களால் தற்போது வரை மறக்க முடியாது.அதற்கு முக்கிய காரணம் அந்த காலத்தில் அவர்கள் நடிப்பு இயல்பாக இருந்தது மட்டுமல்லாமல் அவர்களது நடிப்பு மக்களை கவர்ந்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தையும் தனக்கென ஒரு அந்தஸ்தை உருவாக்கிக் கொண்ட நடிகை தான் ஆச்சி மனோரமா இவர் தற்பொழுது இல்லை என்றாலும்.

இவர் நடித்த பல திரைப்படங்கள் நாள்தோறும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டுதான் இருக்கிறது இவர் நடித்த திரைப்படங்களை பார்த்தால் மக்கள் தற்பொழுதும் இவர் மட்டும் இப்பொழுது இருந்தால் இவர் இன்னும் நிறைய திரைப்படங்களில் தனது முழு திறமையை வெளிப்படுத்திக் கொண்டே வருவார் என கூறி வருத்தப்பட்டு வருகிறார்கள்.

ஆச்சி மனோரமா தமிழ் மட்டுமல்லாமல் இந்தி,மலையாளம்,தெலுங்கு,கன்னடம் சிங்களம் என ஆறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் என்னதான் தனக்கு தமிழ் மட்டும் வருமே என்று சொன்னாலும் மொழி தெரியாத திரைப்படங்களில் கூட அந்த காலத்திலேயே இவர் தனது நடிப்பை பல மொழி திரைப்படங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் ஆட்சி மனோரமாவிற்கு ஆரம்ப காலகட்டத்தில் நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு மட்டுமே தான் கிடைத்தது பின்புதான் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது ஆனால் இவர் கடைசி வரை இவரது ஒரு ஆசை மட்டும் நிறைவேறாமல் இருக்கிறதாம் அதனைப் பற்றி தான் ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

அதாவது ஆச்சி மனோரமா ஒரு திரைப்படத்திலாவது கதாநாயகியாக நடித்து விட வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டே இருந்ததாம் அதுமட்டுமல்லாமல் கதாநாயகியாக எப்படியாவது நடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தாராம் இதனை இவரது நெருங்கிய தோழியான மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்களிடம் கூட பலமுறை கூறியுள்ளாராம்.

மேலும் தற்பொழுது இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் மனோரமாவிற்கு இப்படி ஒரு ஆசை இருந்தது என்பது எங்களுக்கு தெரியாது ஆனால் அவரது ஆசை நிறைவேறாமல் போனது எங்களுக்கும் கொஞ்சம் வருத்தம் உள்ளது என கூறி வருகிறார்கள்.

Leave a Comment