கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு என புடவையில் ரசிகர்களை சுண்டி ஈர்க்கும் நடிகை குஷ்பூ.!

நடிகை குஷ்பூ சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தற்போது கருப்பு நிற புடவையில் மிகவும் அழகாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகை குஷ்பூ தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மிகவும் பிட்னஸ் மேற்கொண்டு வருகிறார்.

இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் மேலும் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணமும் மேற்கொண்டு வருகிறார். ஒரு பக்கம் படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வந்தாலும் இவருக்கு மட்டும் எப்படி தான் நேரம் கிடைக்கிறதோ என ரசிகர்கள் கூறி வருகின்றனர். 90களில் முன்னணி நடிகையாக இருந்து வந்த குஷ்பூ கமல், ரஜினி, சரத்குமார் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

ஒரு கட்டத்தில் தனது படங்களை இயக்கிய இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். மேலும் குஷ்பூ சில திரைப்படங்களில் நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இதனை அடுத்து சீரியல் நடிப்பது, சீரியல்களை தயாரிப்பது, ரியாலிட்டி ஷோர்களின் நடுவர் என பன்முக திறமைகளை கொண்டு கலக்கி வரும் நிலையில் தற்போது வரையிலும் கொழுக்கு மொழுக்கு என இருந்து வருகிறார்.

இவ்வாறு குஷ்பூ தன்னுடைய இந்த வயசிலும் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது கருப்பு நிற புடவை அழகாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அசத்தியுள்ளார்.

மேலும் கருப்பு நிறம் இல்லாமல் மற்ற எந்த கலரும் அந்த அளவிற்கு அழகான உணர்வை கொடுப்பதில்லை என்ற கேப்ஷனுடன் தெரிவித்துள்ளார். இவ்வாறு இவருடைய அழகிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக லைக்குகளும் கமெண்டுகளும் குவிந்து வருகிறது.

kushboo

Leave a Comment

Exit mobile version