நடிகை குஷ்பு கண்ணில் காயம்.! பதறி போய் நிற்கும் ரசிகர்கள்.

80 ,90 காலகட்டங்களில் ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் திரையுலகில் வரும் பொழுது பல முன்னணி நடிகைகள் இருந்தாலும் தனது உடலமைப்பை காட்டி அவர்களை எல்லாம் ஓரம் கட்டினார் குஷ்பு. மேலும் அவர் வெகு விரைவிலேயே முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

அதன் மூலம் தனது மார்க்கெட்டை உயர்த்தும் கொண்டதோடு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தையும் பிடித்தார். இவர் தமிழில் மட்டும் தனது பயணத்தை முடித்துக் கொள்ளாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி சினிமா துறையில் சிறப்பாக வலம் வந்த இவர் அதே துறையில் இயக்குனராக பணிபுரிந்து வந்த சுந்தரியை திருமணம் செய்து கொண்டார் அதன்பிறகு சினிமாவிலிருந்து படிப்படியாக அதிலிருந்து விலகினார் மேலும் தன்னை நம்பி வரும் ஒரு சில குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் சமீபகாலமாக நடித்து வந்த இவர் திடீரென அரசியல் பிரவேசம் கண்டு தற்பொழுது பயணித்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற காலகட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்தா என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது அதனை ஏற்று தற்போது உடல் எடையை குறைத்து செம்ம ஸ்லிம் ஆக மாறி உள்ளார் அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் இளம்வயதில் இருக்கின்ற போது தற்போது இருக்கிறீர்கள் என்று கூறி அவர்களுக்கு ஆதரவாக நின்று வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை குஷ்புவின் கண்ணில் ஒரு பெரிய கட்டுப் போட்டுக் கொண்டு இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது மேலும் அதில் பதிவு ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

சிறிது காலம் சமூக வலைதள பக்கம் வர மாட்டேன் என்னுடைய கண்ணில் இன்று காலை காயம் ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெற்று இருக்கிறேன் விரைவில் உங்களை சந்திப்பேன் அனைவரும் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லுங்கள் இதை பின்பற்றுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment