பிரபல நடிகருக்கு அக்காவாக நடிக்க போகும் நடிகை “கீர்த்தி சுரேஷ்”.! செல்லம் செட் ஆகுமா..

தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கருக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பொருட்செலவில் மிக பெரிய அளவில் பிரமாண்ட படத்தை எடுத்து வருபவர் இயக்குனர் மணிரத்தினம்.

இவர் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க உள்ளார். முதல் பாகத்தில் பல பிரபலங்கள் நடிக்கின்றனர் அந்தவகையில் ஜெயம்ரவி, கீர்த்திசுரேஷ், கார்த்தி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் போன்ற பல முக்கிய நட்சத்திரங்கள் படத்தில்நடிக்க உள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு அக்காவாக ஒரு ரோலில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக ஆரம்பத்திலிருந்தே தகவல்கள் கசிந்து வந்த நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் கேரக்டர் குறித்து தற்போது கூறப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ் குந்தவை என்ற கேரக்டரில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. நடிகர் கார்த்தி வந்தியதேவன் என்ற ரோலில் நடிக்கிறார் கார்த்திக்கு ஜோடியாக தான் குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்திசுரேஷ் நடிக்கிறார்.

ஜெயம் ரவி ராஜா ராஜா சோழன் என்ற கேரக்டரில் நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ் ஜெயம் ரவிக்கு அக்காவாக இந்த படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையின் கேரக்டரை மிக முக்கியமான ரோல் என்பதால் அதில் கீர்த்தி செல்லச் பொருத்தமாக இருப்பார் என கூறப்படுகிறது மேலும் ரசிகர்களும் அந்த கேரக்டரில் அவர் நடிக்க வேண்டும் என கூறுகின்றனர் மேலும் புகைப்படங்களையும் ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் அந்த புகைப்படம் இந்த படத்தில் இருப்பது இல்லை வேற யாரோ ஒருவர் அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் என படக்குழு அதை மறுத்து வருகிறது.

Leave a Comment