ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் மிகப்பெரிய தவறு செய்த நடிகை கீர்த்தி சுரேஷ்..!

பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் சூப்பர்ஸ்டார் எனவும் போற்றப்படுபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவ்வாறு பிரபலமான நமது ரஜினிகாந்துடன் ஏதாவது ஒரு திரைப்படத்தில் நடிக்க மாட்டோமா என ஏங்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஏராளம்.

அந்தவகையில் வழியே வந்த வாய்ப்பை யாரேனும் தவற விட்டால் அது அவர்களுடைய முட்டாள்தனம் தான் என்று பலரும் கூறுவார்கள். அந்த வகையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

நமது நடிகை அண்ணாத்த திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் பிரம்மாண்ட திரைப்பட வாய்ப்பு ஒன்றை நிராகரித்துள்ளார். இவ்வாறு அவர் செய்தது மிகப் பெரிய தவறு என பலரும் கூறிவருகிறார்கள்.

இவ்வாறு உருவான இந்த அண்ணாத்த திரைப்படத்தை இயக்குனர் சிவா இயக்கியது மட்டுமில்லாமல் இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்து இருந்தார்கள். இவ்வாறு வெளிவந்த இத்திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக வெற்றி பெறவில்லை என்பதே உண்மை.

இன்நிலையில் தமிழ் சினிமாவில் பல்வேறு  திரை நட்சத்திரங்கள் அனைவரும் இணைந்து நடித்துவரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படத்தில்  நடிகை கீர்த்தி சுரேஷுக்கு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் பொன்னியின் செல்வன் மற்றும் அண்ணாத்த  மாரி 2 திரைப் படங்களின் படப்பிடிப்பும் ஒரே சமயத்தில் நடைபெற்ற ஒரே காரணத்தினால் கீர்த்தி சுரேஷ் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கான நேரம் கிடைக்காததன் காரணமாக நிராகரித்துவிட்டார்.

இவ்வாறு கீர்த்திசுரேஷ் ரஜினியுடன் நடித்துவிட்டார் என்ற சந்தோஷத்தில் பலர் இருந்தாலும் பிரமாண்ட பட வாய்ப்பை இழந்த விட்டாரே என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்

Leave a Comment

Exit mobile version