ஒரு சில நடிகைகள் மட்டும் தனது சிறந்த நடிப்புத் திறமையாலும் அழகாலும் நடித்த முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து விடுவார்கள். அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை கீர்த்தி ஷெட்டி.
தற்பொழுது உள்ள இளைஞர்களின் க்ரஷ்ஷாக இவர் விளங்குகிறார். தெலுங்கில் சமீபத்தில் வெளிவந்த உப்பன்னா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் இத்திரைப்படத்தை புச்சி பாபு சனா என்பவர் இயக்கியிருந்தார்.
இத்திரைப் படத்தில் விஜய் சேதுபதியும் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் வெளியாகி சில நாட்களிலேயே பல கோடி வசூலித்து சாதனை படைத்ததாக கூறப்பட்டது. அந்த வகையில் கீர்த்தி ஷேட்டிக்கு இதுதான் அறிமுகப் படமாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து இவர் தமிழில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் சமீப காலங்களாக இணையதளத்தில் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. ஆனால் கீர்த்தி ஷெட்டி தெலுங்கு தவிர நான் வேறு எந்த மொழிகளிலும் நடிக்கவில்லை என்று கூறியுள்ளாராம்.
இதனை குறித்து பல வதந்திகள் இணையதளத்தில் வைரலானது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கீர்த்தி ஷெட்டி தற்பொழுது நான் தெலுங்கில் மூன்று திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன். நானி காரு, சுதீர் பாபு காரு, ராம் காரு ஆகியவர்களுடன் இணைந்து மூன்று திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறி உள்ளார்.
எனவே தற்பொழுது நான் ஒப்புக் கொண்ட திரைப்படங்களில் நடித்து முடித்து விட்டு அதன் பிறகுதான் மற்ற திரைப்படங்களை பற்றி யோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கீர்த்தி ஷெட்டி.