பயந்துட்டியா குமாரு… கஸ்தூரி வலையில் மாட்டிய மீன் போல் சிக்கி தவிக்கும் வனிதா.! இணையதள வாசிகளுக்கு ஃபுல் என்ஜாய்மென்ட் தான்

முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகுமார் இவருக்கு வனிதா விஜயகுமார் என்ற மகள் இருக்கிறார், இவர் ஏற்கனவே 2 முறை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்றவர் தற்போது மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவரின் திருமணம் தான் இன்று சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

அதுவும் வனிதா மேல் உள்ள காதலால் பீட்டர்பால் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்வதற்கு முன்பாகவே அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டது தான் மிகப் பெரிய சர்ச்சையாக மாறி உள்ளது அது மட்டுமில்லாமல் பல சந்தேகங்களையும் உருவாக்கிவிட்டது . சமீபகாலமாக செய்தி சேனல் முதல் யூடியூப் சேனல்கள் வரை அனைத்து பக்கங்களிலும் வனிதா மற்றும் அவரது மூன்றாவது கணவர் பீட்டர் பால் பற்றிய செய்திகள்தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பீட்டர் பால் முதல் மனைவி எலிசபெத் அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் நடிகை கஸ்தூரி பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு நேரடியாக பேட்டி கொடுத்துள்ளார், அந்தப் பேட்டியில் எலிசபெத் வனிதா பீட்டர் பாலை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் அவருக்கு ஏதாவது காரணமாக வேண்டியிருந்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்வார் எனவும் வனிதாவின் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்தார் கஸ்தூரி.

கஸ்தூரியும் தன்னுடைய நியாயமான கேள்விகளை தான் எலிசபெத் இடம் கேட்டுள்ளார் அதற்கு தகுந்தது போல் பதிலளித்துக் கொண்டிருந்தார் எலிசபெத், திடீரென இந்த பேட்டியை பார்த்த வனிதா இந்தப் பேட்டியை பற்றியும் கஸ்தூரி பற்றியும் மிகவும் கேவலமாக கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டார். அந்தக் டுவிட்டில் கஸ்தூரி ஒரு காமெடி பீஸ் எனவும் அவரை ட்விட்டரில் பிளாக் செய்யப்போகிறேன் எனவும் தெரிவித்திருந்தார்.

அதைப்பார்த்த கஸ்தூரி பயந்துட்டியா குமாரு என கிண்டல் செய்து ட்வீட் செய்திருந்தார், இந்த கருத்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, அதுவும் கஸ்தூரியின் பதிலடிக்கு ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது, இன்று முழுவதும் சமூகவலைதளத்தில் இவர்களின் சண்டை தான் இணையதள வாசிகளுக்கு தீனி.

vanitha-kasturi-tweet
vanitha-kasturi-tweet

Leave a Comment