இளையராஜா ஓவியத்தின் முன்பு போட்டோஷூட்..! ரசிகர்களின் கண்களை கலங்கவைத்த நடிகை கஸ்தூரியின் பதிவு..!

actress kasthuri latest news: பொதுவாக இளையராஜாவின் ஓவியத்திற்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது அந்த வகையில் இவர் ஓவியங்கள் அனைத்துமே உலக புகழ் பெற்றதாக இருப்பது வழக்கம்தான்.

இந்நிலையில் இளையராஜா சமீபத்தில் வைரஸ் தாக்கத்தின் காரணமாக வெகு நாளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது உயிரிழந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. இன்நிலையில் பிரபலங்கள் பலரும் அவருடைய  மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இதை தொடர்ந்து ஓவியர் இளையராஜா பற்றி நடிகை கஸ்தூரி ஒரு பதிவை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வகையில்  இளையராஜாவின் ஓவியத்திற்கு முன்பு நடிகை கஸ்தூரி போட்டோ ஷூட் நடத்தியதாகவும் அவ்வாறு எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவருடைய அஞ்சலிக்கு அர்ப்பணிப்பதாக கூரியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் நான் இளையராஜாவிற்கு ஒரு விசிறி என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் தற்போது நான் ஒரு விசிறி கிடையாது இரண்டு விசிறி என கூறியுள்ளார் ஏனெனில் ஓவியர் இளையராஜாவை கஸ்தூரிக்கு அறிமுகப்படுத்தியது மனோ என்ற நிபுணர் தான்.

இந்நிலையில் அவருடைய அழகு ததும்பும் சித்திரங்களை ஒரு தீம் ஆக வைத்து நாங்கள் போட்டோ ஷூட் நடத்தி னோம். இவ்வாறு எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவருக்கு அஞ்சலியாக சமர்ப்பிக்க வேண்டிய நிலைமை ஆயிற்று என்பதை நான் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை.

மேலும் இளையராஜாவின் மறைவை என்னால் ஜீரணிக்கவே முடியாது  என தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். இவ்வாறு கஸ்தூரி வெளியிட்ட பதிவானது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது அது நான் தான்.

kasthuri

Leave a Comment

Exit mobile version