நடிகை ஜோதிகாவின் பேச்சால்!! தஞ்சை கலெக்டர் எடுத்த அதிரடி முடிவு!!

Actress Jodhika’s talk , Action taken by the Tanjore Collector: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரானவர் ஜோதிகா. இவர் பிரபல நடிகரான சிவகுமாரின் மகனான சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் கடந்த சில தினங்களாக ஊடகங்களில் ஜோதிகாவை பற்றி சித்தரித்த வண்ணமே உள்ளனர்.இவர் தற்போது நடித்துவரும் படத்தின் ஷூட்டிங்குக்காக தஞ்சாவூருக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்குள்ள மக்கள் தஞ்சை பெரிய கோயில் பழமையானதும் பிரசித்தி பெற்றதும் ஆகும் அதனை நீங்கள் கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும் என்று அவரிடம் கூறியுள்ளனர். எனவே ஜோதிகாவும் அந்த கோவிலுக்கு சென்று பார்த்துள்ளார். அதனைதொடர்ந்து மறுநாள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சூட்டிங் நடத்தி உள்ளார்கள். ஆனால், மருத்துவமனை தூய்மை இல்லாமல் அசுத்தமாக இருந்துள்ளது. இதனை அவர் பார்த்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் அவர் பேசும்போது கோவிலுக்கு செலவிட்டு பராமரிக்கும் பணத்தை மருத்துவமனைக்கும் பள்ளிகளுக்கும் செலவிடவும் என்று வேண்டுகோலாக கூறியிருந்தார். ஆனால் இதனை ஊடகங்கள் தங்களுக்கு ஏற்றார் போல் சித்தரித்து விட்டனர்.

அவர் கூறியதன் விளைவாக தஞ்சாவூர் கலெக்டர் அவர்கள் ஜோதிகா கூறியது போன்று மருத்துவமனை சரியாக பராமரிக்கப்படாமல் இருந்ந்தால் அதனை தான் பார்வையிட்டு சரி செய்வதாக பேட்டி அளித்துள்ளார்.

Leave a Comment