எனக்கு காதலனாக சிம்பு தான் நடிக்க வேண்டும்..! இயக்குநரிடம் கெஞ்சிய நடிகை ஹன்சிகா..!

திரையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முதன் முதலாக தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் மூலம்தான் அறிமுகமானார் இவர் அறிமுகமான முதல் திரைப்படம் ஓரளவு மட்டுமே வெற்றியை கொடுத்தது என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்தவகையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து  தமிழில் வேலாயுதம், எங்கேயும் காதல், சிங்கம், மான் கராத்தே, அரண்மனை, ரோமியோ ஜூலியட்,  போகன் போன்ற பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்தது மட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர்களின்  திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

நடிகை ஹன்சிகா தமிழ் சினிமாவில் விஷால், சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா, விஜய் என  பல  ஹீரோக்களுடன் படம் நடித்துக் கொண்டிருந்த நிலையில்  நடிகர் சிம்புவுடன் வாலு என்ற திரைப்படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில்  இந்த காதல் சிறிது காலத்திலே பிரிவை சந்தித்து விட்டது.

இந்நிலையில் நடிகர் சிம்பு  முதல் காதலி நயன்தாராவுடன் சமந்தா விஜய் சேதுபதி ஆகியோர்களுடன் இணைந்து காற்றுவாக்கில் இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்தின் அப்டேட்டை விக்னேஸ்வரன் சமீபத்தில் வெளியிட்ட பொழுது ரசிகர் ஒருவர் நான் என் தலைவன் சிம்புக்கு தான் என கமெண்ட் செய்திருந்தார்.

இதைப் பற்றி மற்றொரு ரசிகர் சிம்பு ஹன்சிகாவுக்கு என்று கூறியுள்ளார். அதாவது ஹன்சிகா நடிப்பில் உருவாகும் 50வது திரைப்படமான மகா என்ற திரைப்படத்தில்  நடிகர் சிம்பு ஹன்சிகாவுக்கு காதலனாக நடித்துள்ளார் இவ்வாறு இந்த கதாபாத்திரத்தில் சிம்பு தான் நடிக்க வேண்டும் என ஹன்சிகா சிபாரிசு செய்துள்ளார்.

Leave a Comment