மாமியார் வீட்டிக்கு போனதும்.. ஹன்சிகா செய்த முதல் வேலை என்ன தெரியுமா.? இதோ பாருங்கள்..

தென்னிந்திய சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஓடிக்கொண்டு இருப்பவர் நடிகை ஹன்சிகா. இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்பு பருவ வயதை எட்டிய பிறகு ஹீரோயின்னாக நடிக்க தொடங்கினார். குறிப்பாக தமிழில் இவர் எடுத்த உடனேயே தனுஷ், விஜய், ஜெயம் ரவி போன்ற டாப் நடிகர்களுடன்..

நடித்து வெற்றி மேல் வெற்றியை கண்டார். இதனால் அவருக்கென ஒரு ரசிகர்கள் கூட்டமும் உருவாகியது. ரசிகர்களும் இவருக்கு செல்ல பெயரை வைத்தனர் அந்த வகையில் நடிகை ஹன்சிகாவை அனைத்து ரசிகர்களும் குட்டி குஷ்பூ என கூப்பிட்டு வந்தனர் தொடர்ந்து சினிமா உலகில் ஓடிக்கொண்டிருந்த ஹன்சிகா..

கடைசியாக தனது ஐம்பதாவது திரைப்படமான மஹா திரைப் படத்தில் நடித்தார் அதன் பிறகு இவர் திடீரென திருமண விஷயத்தில் தலை காட்டினார். நடிகை ஹன்சிகா தன்னுடைய நீண்ட நாள் நண்பரும், தொழிலதிபருமான சொஹைல் கத்துரியா என்பவரை ஜெய்பூரில் உள்ள பழைய  அரண்மனையில் திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்திற்கு குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர் திருமணம் முடிந்த பிறகு இந்த ஜோடியின் புகைப்படங்கள் வெளிவந்த நிலையில் தற்பொழுது ஹன்சிகா தனது மாமியார் வீட்டிற்கு சென்று முதலில் தனது கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு சமைத்து கொடுத்தாராம்.

ஹன்சிகா முதலில் தன் கையால் அல்வா செய்து அனைவருக்கும் விருந்தளித்துள்ளார் அந்த புகைப்படம் தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் லைக்களையும், கமெண்ட்களையும் அள்ளி வீசி வருகின்றனர்.  இதோ நீங்களே பாருங்கள் நடிகை ஹன்சிகாவின் அந்த அழகிய புகைப்படத்தை..

hanshika-
hanshika-
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment