பாத்திமா பாபு இப்போது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்

பல நடிகர்,நடிகைகள் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உள்ளார்கள். அந்த வகையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் நடிகை பாத்திமா பாபு. இவர் நீண்ட காலங்களாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.

இவரின் தமிழ் உச்சரிப்பு மிகவும் தெளிவாக சிறப்பாக அமைந்ததால் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார். அந்த வகையில் இவருக்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் கதாநாயகியாகவும், துணை நடிகையாக மற்றும் அம்மா போன்ற கேரக்டர்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

தற்பொழுது பிரபல முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ்,சூர்யா, விஜய், ஜீவா உள்ளிட்ட இன்னும் இளம் நடிகர்களின் படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இதனைத் தொடர்ந்து தற்போது சின்னத்திரையிலும் நடித்து கலக்கி வருகிறார்.

அந்த வகையில் ஜீ தமிழில் ஆயிரம் எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி சீரியல் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு  ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

இந்நிகழ்ச்சியில் இவரால் சில வாரங்கள் மட்டுமே நீடித்து இருக்க முடிந்தது.  இந்நிலையில் தற்பொழுது BB jodigal என்ற நிகழ்ச்சியில்  பிக்பாஸ் சீசன் அறிமுகமானதிலிருந்து பிக்பாஸ் சீசன் 4 வரை இருக்கும் அனைத்து போட்டியாளர்களும் ஜோடிகளாக பங்குபெற்ற நடனமாட உள்ளார்கள். இந்த நிகழ்ச்சி மே 2 ஆம் தேதியிலிருந்து ஒளிபரப்பாக உள்ளது.

இதில் பாத்திமா பாபு மற்றும் மோகன் வைத்திய இருவரும் இணைந்து நடனமாட உள்ளார்கள். அந்த வகையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் பாத்திமா பாபு பரதநாட்டியம் ஆடும் உடையில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment