சேலை கட்டிக்கொண்டு முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் தேவயானி மகள்.! புகைப்படத்தை பார்த்து ஆச்சரியப்படும் ரசிகர்கள்..

பொதுவாக சினிமாவை பொருத்தவரை ஒரு நடிகை தன்னுடைய இளமை குறையும் வரை மட்டும்தான் தொடர்ந்து சினிமாவில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வர முடியும் வயதான பிறகு அவர்களே நினைத்தாலும் கூட பெரிதாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காது ரசிகர்கள் மத்தியில் இவர்களுக்கு என இருந்த மார்க்கெட்டும் குறைந்துவிடும்.

அந்த வகையில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை தேவயானி. இவர் அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அந்தஸ்தை பெற்றார் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இவருக்கு பெரிதாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் சில சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார் இப்படிப்பட்ட நிலையில் இவருடைய மகள் மிகவும் பெரிய பெண்ணாக வளர்ந்து புடவை அணிந்து கொண்டு இருக்கும் அழகிய புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை தேவயானி ‘தொட்டால் சிணுங்கி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இதனை அடுத்து இவர் அஜித்துடன் இணைந்து நடித்த காதல் கோட்டை என்ற திரைப்படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார். அதன் பிறகு நடிகர் விஜயுடன் நினைத்தேன் வந்தாய், சரத்குமார் நடித்த சூரிய வம்சம், மம்முட்டி நடித்த மறுமலர்ச்சி உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

devayani 2
devayani 2

இதன் மூலம் பிரபலமான இவர் ஒரு கட்டத்தில் தொடர்ந்து சீரியல்களில் நடிப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார். அந்த வகையில் கோலங்கள் என்ற சீரியலில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகமான நிலையில் இந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. இப்படிப்பட்ட நிலையில் நடிகை தேவயானி இயக்குனர் ராஜமுருகன் என்பவரை பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

devayani
devayani

இந்த தம்பதியினர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ள நிலையில் இவருடைய மூத்த மகள் இனியா தற்பொழுது புடவை அணிந்து கொண்டு இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது அவருக்கு 17 வயது ஆகும் நிலையில் இவருடைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தேவயானி மகளா இது என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Leave a Comment