இந்த மாதிரி கேரக்டரில் நடித்தாலும் பரவாயில்லை எனக் கூறிய நடிகை கேதரின் தெரசா.!

பொதுவாக சில நடிகைகள் சினிமாவிற்கு அறிமுகமாகி தன்னுடைய முதல் படத்திலேயே பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்து விடுவார்கள் மேலும் தொடர்ந்து சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருவதால் அவ்வப்பொழுது கவர்ச்சி நடிகையாக நடிக்க மாட்டேன் என பல மேடைகளில் கூறி வருவார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்களுக்கு திரைப்படம் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக கவர்ச்சியில் ஆர்வம் காட்டி வரும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எஇப்படிப்பட்ட நிலையில் கார்த்திக் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றினை பெற்ற திரைப்படம் தான் மெட்ராஸ்.

இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை கேத்தரின் தெரசா.இந்த திரைப்படத்தினை தொடர்ந்து கதகளி,கலகலப்பு 2,கணிதன் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் அடுத்தடுத்து நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

இந்நிலையில் கடைசியாக இவர் தமிழில் சித்தார்த் நடித்திருந்த அருவம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு இவருக்கு பெரிதாக தமிழில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தற்பொழுது தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவ்வாறு இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் ஹீரோயின் கதைகளும் கொண்டதாக அமைந்திருந்தது எனவே இது பற்றி அவரே கூறுகையில்,இது பற்றி நான் கவலைப்படவல்லை அந்த மாதிரி நடந்தாலும் பரவாயில்லை. ஸ்ரீதேவி, ஜெயசுதா,ஜெயப்பிரதா உள்ளிட்ட பிரபல நடிகைகளை தங்களுக்கு மார்க்கெட்டில்லாத சமயத்தில் இப்படி இரண்டு ஹீரோயின் படங்களில் நடித்து தங்களது இடத்தை தக்க வைத்து கொள்கின்றனர் என மிகவும் பாசிட்டிவான பதிலை அளித்துள்ளார் கேத்தரின் தெரசா.

இப்படிப்பட்ட நிலையில் இவர் பிம்பிசாரா என்ற திரைப்படத்தில் நடித்த திரைப்படம் வெளியாகி இவருக்கு மிகப்பெரிய வெற்றினை பெற்று தந்தது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார் ஆனால் அந்த திரைப்படங்கள் இவருக்கு பெரிதாக வெற்றினை பெற்று தரவில்லை. இருந்தாலும் இந்த படத்தில் இடம்பெற்று இருந்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றிருந்தது.

Leave a Comment