நயன்தாராவைத் தொடர்ந்து அம்மன் வேடத்தில் நடிக்க இருக்கும் பிரபல நடிகை.!

ஏராளமான முன்னணி நடிகைகள் அம்மன் வேடத்தில் நடித்து பிரபலமடைந்தவர்கள் உள்ளார்கள்.அந்த வகையில் கே.ஆர் விஜயா, ரம்யாகிருஷ்ணன், குஷ்பு,மீனா, சௌந்தர்யா என இன்னும் சில நடிகைகளும் அம்மன் வேடத்திற்கு என்று புகழ்பெற்ற நடிகைகளாக விளங்கினார்கள்.

இவர்களைத் தொடர்ந்து சமீபத்தில் நயன்தாரா நடித்திருந்த அம்மன் கதாபாத்திரம் கொஞ்சம் ஸ்டைலாக இருந்தது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது நடிகை பிந்து மாதவியும் இதே வரிசையில் சேர உள்ளார். நடிகை பிந்துமாதவி தொடர்ந்து திரைப்படம் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வந்தார்.

இவர் தற்பொழுது நாகா என்ற திரைப்படத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தினை எம்எஸ் மூவிஸ் பட நிறுவனம் தயாரிக்கின்றது. அழகு குட்டி செல்லம், நஞ்சுபுரம் போன்ற திரைப்படங்களை இயக்கிய சார்லஸ் இத்திரைப்படத்தினை இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தில் பிந்து மாதவியை தொடர்ந்து ரைசா வில்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

pinthu mathavi

பிறகு ஸ்ரீகாந்த் மற்றும் கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இவர்களை தொடர்ந்து விஷால் சந்திரசேகர் இசையமைக்க எஸ்ஆர் சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீப பேட்டி ஒன்றில் இத்திரைப்படத்தின் இயக்குனர் சார்லஸ் இத்திரைப்படம் நீதித்துறையை நெருங்க கூட முடியாத பல்லாயிரம் பெண்களின் வாழ்க்கை, அநீதியின் மொத்த உருவமாக திகழும் ஒரு தீயவனை ஒரு பெண் தெய்வம் அவதாரமெடுத்து எப்படி எல்லாம் அவனை பழிவாங்கி அழிக்கின்றது என்பதே இத்திரைப்படத்தின் கதை.

அந்தவகையில் பிந்துமாதவி தீயவர்களை அழிக்கும் மானசாதேவியாக நடிக்கிறார்.  நடிகர் ஸ்ரீகாந்த் தொல்லியல் ஆய்வாளராக நடிக்கும் இத்திரைப்படம் கிளைமக்ஸ்  காட்சிகளுக்கு மட்டும் சுமார் 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கியுள்ளார்கள். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் நாகர்கோவில் உட்பட பல ஊர்களில் இருக்கும் நாகராஜா கோவில்கள் மற்றும் நாகநாதசுவாமி கோவிலில் படமாக்கப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version