கணவருடன் இருக்கும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட நடிகை பூமிகா – இதோ நீங்களே பாருங்கள்.

நடிகை பூமிகா தெலுங்கு சினிமாவில் நடித்ததன் மூலம் தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானர் முதல் படமே பிரமாண்ட வெற்றியை பெற்றதன் காரணமாக அடுத்த பட வாய்ப்பை கைப்பற்றி அசத்தினார் நடிகை பூமிகா.

அந்த வகையில் தமிழில் ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல் ஆகிய படங்கள் இவருக்கு இன்னும் பெயரையும் புகழையும் பெற்றுத் தந்ததோடு ரசிகர்களை உருவாக்கி கொடுத்தது. இதனை அடுத்து  தமிழில் அவர் சிறப்பாக தனது பயணத்தை  மேற்கொள்வார்  என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென என்ன நினைத்தாரோ என்னவோ..

தமிழ் சினிமா பக்கம் இவர் தலை காட்டவில்லை மாறாக தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் தொடர்ந்து நடித்து அசத்தினார். இப்படி ஓடிக்கொண்டிருந்த 2007ஆம் ஆண்டு பரத் தாகூர்  என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் படங்களில் வாய்ப்புகள் குறைய தொடங்கியது இருப்பினும் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அவ்வப்போது வந்த பட வாய்ப்புகளில் நடித்து வந்தார்.

ஏன் தல தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கூட பூமிகா நடித்து அசத்தியிருந்தார் இப்படி பிரம்மாண்ட படத்தில் நடித்திருந்தாலும் பின் சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் சுத்தமாக கிடைக்காமல் இருக்கிறது இருந்தாலும் தனது திறமையின் மேல் நம்பிக்கை வைத்து காத்துக் கொண்டிருக்கிறார்.

இது இப்படியிருக்க தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை அவ்வப்போது சந்தோஷப்படுத்த நடிகை பூமிகா நாம் எதிர்பார்க்காத அளவிற்கு புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் இந்த நிலையில் நடிகை பூமிகா தனது கணவர் பரத் தாகூர் உடன்  இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..

poomika
poomika

Leave a Comment