படப்பிடிப்பு தளத்தில் இளம் நடிகைகளுக்கு என்ன நடக்கிறது தெரியுமா.! வெளிப்படையாக தனக்கு நடந்த கொடுமையை கூறிய அதுல்யா..!

athulya open talk in shooting spots: தற்போது தமிழ் சினிமாவில் உள்ள இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளவர் தான் நடிகை அதுல்யா ரவி. என்னதான் இவருடைய திரைப்படங்கள் சொல்லும் அளவிற்கு வெற்றியை கொடுக்காவிட்டாலும் திரை உலகில் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்திற்கு அளவே இல்லை.

அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று வரும் அதுல்யா ரவி  அதற்கான காரணம் என்னவென்றால் அவருடைய கட்டான உடலமைப்பும் காந்த பார்வையும் தான் என பலரும் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் எப்படியாவது திரைஉலகில் ஒரு மெகா ஹிட் திரைப்படத்தை கொடுத்துவிட வேண்டும் என அயராது போராடிவரும் அதுல்யா ரவி தற்போது எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் சரி நான் நடிக்க தயார் என முன் வந்துள்ளாராம்

இந்நிலையில் ஜெய்யுடன் எண்ணித்துணிக எனும் திரைப்படத்தில் நடிகை அதுல்யா நடித்து வருகிறார் இவ்வாறு இந்த திரைப்படத்தில் இவர் நடிப்பதற்காக பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து உள்ளதாக நடிகை அதுல்யா வெளிப்படையாக பேசியுள்ளார்.

ஒரு நாளில் மூன்று திரைப்படத்திற்கான கால்சீட் வாங்கியதன் காரணமாக தொடர்ந்து திரைப்படத்தில் நடித்துக் கொண்டே இருக்கிறாராம் இதனால் இவருக்கு ஓய்வு சுத்தமாக கிடையாதாம் மேலும் இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தன்னுடன் நடித்த பெண்களுடன் இவர் மிக நெருக்கமாக பழகி விட்டாராம்.

athulya jai
athulya jai

இதன் காரணமாக அவர்களுடைய  ஏழ்மையான வாழ்க்கையை அவர் புரிந்து கொண்டதாகவும் இப்படத்தில் ஒரு சண்டைக்காட்சி இருப்பதாகவும் அதை என்னால் மறக்கவே முடியாது என்றும் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அந்த காட்சியில் பலூனில் சிகப்பு நிற திரவத்தை நிரப்பி தன்னுடைய ஆடைக்குள் பொருத்தி விடுவார்கள்.  அப்பொழுது சுடும் பொழுது இயக்குனர் கையில் வைத்திருக்கும் பட்டனை வைத்து அழுத்துவார்  அப்பொழுது அந்த பலூன் வெடித்து சிவப்பு நிறம் முழுதும் தெறித்து காணப்படும். அப்பொழுது நான் கீழே விழ வேண்டும்.

ஆனால் இந்தக் காட்சியில் நடித்தபோது சுட்டவுடன் நான் நிஜமாகவே மயங்கி விழுந்துவிட்டேன் அனைவரும் சூப்பர் என சொல்லி என்னை பாராட்டினார்கள் பின்னர் என்னை எழுப்பி பார்த்தார்கள் அதன் பிறகுதான் தெரிந்தது நான் நிஜமாகவே மயங்கி விட்டேன் என.

Leave a Comment