நடிகை ஆண்ட்ரியா வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய சோகம்.! இதனால் தான் திருமணம் செய்து கொள்ள வில்லையாம்.!

நடிகையாகவும்,பின்னணிக் குரல் கொடுப்பவராகவும், பாடகியாகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஆண்ட்ரியா. இவர் இறுதியாக விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார் அத்திரைப்படத்தில் இவருக்கு பெரிதாக கதாபாத்திரம் இல்லாத காரணத்தினால் இதற்குமேல் முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.

இவர் 2005ஆம் ஆண்டு வெளிவந்த கண்ட நாள் முதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் இத்திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிறகு பின்னணி குரல் கொடுப்பவராக தொடர்ந்து பணியாற்றி வந்தார்.

இதன் மூலம் இவருக்கு பச்சைக்கிளி முத்துச்சரம்,ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் ஹீரோயினாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டார்.இதன் மூலம் தான் இவருக்கு வடசென்னை,மங்காத்தா, விஸ்வரூபம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

பிறகு பாடகியாகவும் கலக்கி வந்த இவர் பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். இவ்வாறு மிகவும் பிஸியாக இருந்த வந்த இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்களால் கலைக்கப்பட்டது எனவே இதற்கு மேல் எந்த திரைப்படத்திலும் அடித்தாலும்  எனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்று கூறியிருந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து சோசியல் மீடியாவில் புகைப்படங்கள் மற்றும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அந்த வகையில் நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என ஒரு ரசிகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு சில வருடங்களுக்கு முன்பு எனது வாழ்க்கையில் ஒரு நபர் இருந்ததாகவும் அவரால் என் வாழ்க்கை  சீரழிந்து விட்டதாக்கவும்,  உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் கூறியிருந்தார். அவர் ஒரு அரசியல்வாதி தான் என்றும் கூறிவுள்ளார்.

Leave a Comment