மற்ற நடிகைகள் காட்டிலும் நடிகை ஆண்ட்ரியா தனித்து நிற்க காரணம் – இந்த விஷயம் தானாம்.!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகைகளில் ஒருவர் ஆண்ட்ரியா. சினிமா உலகில் இவர் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மத்தியில் பேசப்படும் கதாபாத்திரமாக தான் இன்று வரையிலும் இருந்து வந்துள்ளன

அப்படித்தான் இவர் இன்று வரையிலும்  நடித்துள்ளார் ஏனோதானோவென்று சினிமாவில் வந்த  இல்லாமல் வருடங்கள் போனாலும் தான் நடிக்கும் கதாபாத்திரம் சிறப்பாக சிறப்பாக இருக்க வேண்டும் என நினைப்பார். கதைக்களம் மற்றும் இவரது கதாபாத்திரம் சிறப்பாக இருந்தால் மட்டுமே நடிக்க ஒத்துக் கொள்வார் ஆண்ட்ரியா.

அண்மையில் கூட இவர் நடிப்பில் வெளியான மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் அரண்மனை  3 இந்த படத்தில் இவரது நடிப்பு வியக்க வைக்கும் வகையில் இருந்தது இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கினுடன்  கைகோர்த்து பிசாசு 2 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக அவர் ரொம்ப கஷ்டப்பட்டு நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை ஆண்ட்ரியா பட வாய்ப்புகள் கிடைத்தால் முதலில்  கதையின் ஒன் லைன் ஸ்டோரி அனுப்ப சொல்லுவாராம் அதை படித்துவிட்டு பின் இயக்குனரை அழைப்பாராம் இயக்குனர் சொல்லும் கதையும் அந்த ஒன்லின் ஸ்டோரி யும் ஒப்பிடும் வகையில் இருந்தால் மட்டுமே இவர் நடிக்க ஆரம்பிப்பாராம் அதன்பின் தான் தேதி சம்பளம் போன்ற பேச்சுகளை கொண்டு வருவாராம்.

ஆனால் இவரை விட இப்பொழுது இருக்கும் நடிகைகள் பலரும் கதை சொல்ல வருவதற்கு முன்பாகவே சம்பளம், தேதி போன்றவற்றை தான் முதலில் கேட்கின்றனர் அதனால் தான் மற்ற நடிகைகள் விட ஆண்ட்ரியா தனித்து நிற்கிறார் என தெளிவாக தெரிய வந்துள்ளது. இச்செய்தி தற்போது ஆண்ட்ரியா ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளது.

Leave a Comment