ஆண்ட்ரியா அதற்காக ரகசியமாக சிகிச்சை எடுத்துக்கொண்டார்.! பரபரப்பை கிளப்பும் தகவல்

தனது அழகினாலும், நடிப்பு திறமையினாலும் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஆண்ட்ரியா. இவருக்கென்று தனி ஸ்டைலினால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் அதோடு ஆண்ட்ரியா பொதுவாக இவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களின் கதைகளையும் ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவர் சினிமாவிற்கு பாடகராக தான் அறிமுகமாகியுள்ளார்.  இதன் மூலம் பிரபலமடைந்த இவருக்கு திரைப் படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.அந்த வகையில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இந்நிலையில் ஆண்ட்ரியா சமீபத்தில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் சம்பந்தமே இல்லாத ஒரு கேரக்டரில் ஆண்ட்ரியா நடித்திருந்ததால் இத்திரைப்படம் இவருக்கு நெகட்டிவாக அமைந்தது.

எனவே ஆண்ட்ரியா இனிமேல் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் நான் நடிக்கும் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே எந்த திரைப்படமாக இருந்தாலும் நடிப்பேன் என்று திட்டவட்டமாக  தயாரிப்பாளர்களிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது இவர் நடிப்பில் அரண்மனை 2 திரைப்படம் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து பிரபல இயக்குனரான மிஷ்கின் இயக்கிவரும் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதை கவனம் செலுத்தி வந்து தனது உடல்நிலையில் பார்ப்பதை தவறவிட்டு விட்டார்.

அந்தவகையில் யாரிடமும் சொல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டதால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருவதாக சமீபத்தில் கூறியிருந்தார்.இதனை பார்த்த ரசிகர்கள் வடிவேலு காமெடிகளை மீம்ஸ்களை உருவாக்கி ஆண்ட்ரியாவை கலாய்த்து வருகிறார்கள். இந்நிலையில் ஆண்ட்ரியா விரைவில் குணமடைந்து விடுவேன் என்றும் கொஞ்சம் கொஞ்சம் குணமடைந்து வருவதாகவும் கூறி உள்ளார்.

Leave a Comment