தனது திருமணம் குறித்து முதல் முதலாக வாய் திறந்த நடிகை அம்மு அபிராமி..! இணையத்தில் வைரலாகும் தகவல்..!

தமிழ் சினிமாவில் ராட்சசன் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை தான் அம்மு அபிராமி. இவ்வாறு பிரபலமான நமது நடிகை இந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிகாட்டியதன் மூலமாக அடுத்த அடுத்த பட வாய்ப்புகளை எளிதில் பெற ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில் இவர் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த திரைப்படத்தின் வெற்றி தொடர்ந்து நமது நடிகை தம்பி, நவரசா, யானை போன்ற நல்ல கதைகளம் உள்ள திரைப்படங்களாக தேடி தேடி நடந்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டு  மூன்றாம் இடத்தை பிடித்து வெற்றி கண்டுள்ளார். மேலும் நமது நடிகைக்கு எப்பொழுது திருமணம் என ரசிகர்கள் பல்வேறு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

பொதுவாக சமூக வலைதள பக்கத்தில் நடிகைகள் புகைப்படம் வெளியிடுவதும் அவற்றின் மூலமாக ரசிகர்களின் ஏக்கத்தை தூண்டுவதும் வழக்கமாகி போய்விட்டது அந்த வகையில்  அவர்கள் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்களை தெரிவித்து வருகிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் சமீபத்தில்  பல்வேறு பிரபலங்களும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடுவது வழக்கமாகி போய்விட்டது இதனை நடிகை அம்மு அபிராமியும் செய்துள்ளார் அந்த வகையில் தனக்கு எப்பொழுது திருமணம் என்று கேள்வி எழுப்பிய ரசிகர்களுக்கு பதில் கூறும் வகையில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியது என்னவென்றால் தனக்கு தற்போது 22 வயது ஆகிறது ஆகையால் இந்த வயதில் எனக்கு திருமணத்தை விட பல்வேறு முக்கியமான இலக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளார் மேலும் தனக்கு திருமணம் செய்து கொள்ள எது சரியான நேரம் என்று தோன்றுகிறதோ அப்பொழுதுதான் நான் திருமணம் செய்து கொள்வேன் என நமது நடிகை தெரிவித்துள்ளார்.

Leave a Comment