இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை அமலா.!! விவரம் உள்ளே.

actress Amala re-entry in Tamil, After 30 years in director Sri Karthik’s movie! Details inside: அமலா இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழில் இயக்குனர் டி ஆர் ராஜேந்திரன் இயக்கி 1986 ஆம் ஆண்டு வெளியான மைதிலி என்னை காதலி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது என்பது அனைவரும் அறிந்ததே.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து மெல்ல திறந்தது கதவு, ஒரு இனிய உதயம், பன்னீர் நதிகள், வேதம் புதிது, இது ஒரு தொடர்கதை, அக்னி நட்சத்திரம், மாப்பிள்ளை, மௌனம் சம்மதம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் இதை தொடர்ந்து இவர் நடிகர் நாகர்ஜூனா திருமணம் செய்து கொண்டார். அதன்பின் பிரபல தொலைக்காட்சிகளில் பணியாற்றினார். தமிழில் 1991ல்  இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கற்பூரமுல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில்,இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் ரிது வர்மா, பிரியதர்ஷி, கிஷோர் போன்றோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் அவர்கள் இசையமைக்கிறார்.

இந்தத் திரைப்படம் குறித்த செய்தி சர்வாஆனந்த் அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. மேலும் அதுமட்டுமில்லாமல் இதற்கு முன் இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கிய ஷார்ட் பிலிம் ஒன்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment