வெளிநாட்டு சிவாலயத்தில் அரைகுறை உடையில் புனித நீராடிய அமலா பால்.!

தமிழ் திரைவுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் அமலா பால் தற்பொழுது வெளிநாட்டு கோவில் ஒன்று இருக்கு சிவராத்திரி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்று அங்கு புனித நீராடிய புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட தற்பொழுது சமூக வலைதளத்தில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அதாவது நேற்று சிவராத்திரி பூஜை உலகெங்கும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் பலரும் சிவாலயத்திற்கு சென்று விடிய விடிய கண் முழித்து வழிபட்டன.ர் அப்படி நடிகர், நடிகைகளும் சிவபெருமானை வழிபட்டு வருகிறார்கள். எனவே கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் தமன்னா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட தன்னுடைய சகோதரருடன் கர்நாடகாவில் உள்ள சிவன் கோவிலில் சிவராத்திரி கொண்டாடினார் என்ற தகவலும் சோசியல் மீடியாவில் வெளியானது. அப்படி நடிகை அமலாபாலும் இந்தோனேசியாவில் உள்ள சிவபெருமான் கோவிலில் உள்ள குளத்தில் புனித நீராடிய புகைப்படங்களை தன்னுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

amala paul 1

இந்த புகைப்படங்கள் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகளையும் பெற்றுள்ளது. சமீப காலங்களாக அமலாபால் பல கோவில்களுக்கு சென்ற தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு கூட நடிகை அமலா பால் தன்னுடைய தாயாருடன் பழனி கோவிலுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

amala baul 2

மேலும் அங்கு நெற்றியில் விபூதி குங்குமத்துடன் முழு ஆன்மீகமாக மாறிய இவருடைய புகைப்படங்களும் வெளியானது. இவ்வாறு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் அமலாபால் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் பிசியாக இருந்து வரும் நிலையில் இவர் வெளியிடும் அனைத்து புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

amal baul

Leave a Comment

Exit mobile version