50 வயதை அடையும் ஐஸ்வர்யா ராய்க்கு முகத்தில் இத்தனை சுருக்கங்களா.? அப்பனா ரோஜா பூ போல் ப்ரெஷா இருந்தது எல்லாம் பொய்யா.. புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு தற்பொழுது 50 வயது நெருங்கியிருக்கும் நிலையில் அவருடைய புகைப்படங்கள் ஒன்று இணையதளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டத்தை கைப்பற்றினார்.

அதன் பிறகு 1997ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் இதனை தொடர்ந்து பாலிவுட்டில் ஏராளமான படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார். அப்படி ‘அவுர் பியார் ஹோகயா’ என்கின்ற படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் அதன் பிறகு பல பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கினார்.

இவ்வாறு இளமையில் ஐஸ்வர்யா ராய் மிகவும் அழகாக இருந்த நிலையில் ஏராளமான டாப் நடிகர்கள் காதல் வலை வீசினர் ஆனால் இவர் குரு படத்தில் அபிஷேக் பச்சனுடன் இணைந்து நடித்த பொழுது இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. இந்த காதல் திருமணம் வரை சென்று தற்போது இவர்களுடைய காதல் சின்னமாக ஆரத்தியா என்ற மகள் ஒருவரை பெற்றுக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் உலக அளவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து நல்ல கதை அம்சமுள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது இவ்வாறு கிட்டத்தட்ட 25 வருடங்களாக திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் எப்பொழுதும் பிரஷ்ஷாக ரோஜா பூ போல் மிகவும் அழகாக இருப்பார். இவ்வாறு 50 வயதில் முகச்சுருக்கம் என எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இவ்வளவு அழகாக ஜொலிக்கிறாரே என பலரும் யோசித்து வந்த நிலையில் தற்பொழுது இவருடைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் தன்னுடைய உயர்தர மேக்கப்பால் அழகாக ஜொலித்து வருகிறார் ஆனால் மேக்கப் போடாமல் பல சுருக்கங்களுடன் இருப்பது தெரியவந்துள்ளது.

aishwariya rai
aishwariya rai

Leave a Comment