கிசுகிசுவீல் சிக்காமல் இருக்க.. இதை தான் பண்ணுகிறேன் – நடிகை ஐஸ்வர்யா மேனன் பேட்டி.!

சினிமா உலகில் இருக்கும் நடிகைகள் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றி நடித்து அசத்தி வருகின்றனர் ஆனால் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லை என்றால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார்கள். அதில் லிமிட்டாக இருந்து கொண்டால் கூட சிக்கல் இல்லை ஆனால் தனது நண்பர்களுடன் எங்கேயாவது போய்..

புகைப்படம் அல்லது வீடியோவை எடுத்துக்கொண்டால் அதை பெரிய அளவில் கிசுகிசுவாக மாற்றி விடுவார்கள். இதனால் அந்த நடிகைக்கு பெரும் சிக்கல் வந்துவிடும். ஆனால் புதுமுக நடிகையான ஒருவர் மட்டும் தற்பொழுது வரையிலும் கிசுகிசுவில் சிக்காமல் இருந்து வருவது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கிறது அந்த நடிகை வேறு யாரும் அல்ல ஐஸ்வர்யா மேனன் தான்.

முதலில் இவர் காதலில் சொதவுவது எப்படி என்கின்ற படத்தில் ஒரு குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பின் தமிழில்  தீயை வேலை செய்யணும் குமாரு, தமிழ் படம் 2, நான் சிரித்தால் போன்ற படங்களில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தது மேலும் தொடர்ந்து பட வாய்ப்பு அள்ளி வருகிறார் தமிழை தாண்டி இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்ற மொழிகளிலும் வாய்ப்புகள் ஏராளமாக குவிந்து வருவதால்..

ஐஸ்வர்யா மேனனின் மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது ஏன் இப்பொழுது கூட ஐஸ்வர்யா மேனன்னுக்கு தெலுங்கில் நான்கு படம் அதில் நடித்து வருகிறார் இது தவிர அருண் விஜய் உடன் கைகோர்த்து தமிழ் ராக்கர்ஸ் என்னும் வெப் சீரிஸில் நடித்துள்ளார். சினிமா உலகில் தொடர்ந்து வெற்றியை கண்டு வரும் ஐஸ்வர்யா மேனன் மற்ற நடிகைகள் போல இவரும்.. தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தாலும் கிசுகிசுவில் சிக்காமல் இருக்கிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் நீங்கள் ஏன் கிசுகிசுவில் ஏன் சிக்குவதில்லை என கேட்டுள்ளனர் அதற்கு வெளிப்படையாக அவர் சொன்னது. எனக்கு சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க பிடிக்கும் ரிலீஸ்  பார்ப்பதும் ரொம்ப பிடிக்கும் நான் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் வீட்டில் எனது அம்மா, அப்பா மற்றும் நாய் குட்டியுடன் இருப்பதால் எந்த விதமான கிசுகிசுவிலும் சிக்குவதில்லை. என்னுடைய நண்பர்கள் வெளியே கூப்பிட்டால் கூட நான் செல்வதில்லை அவர்கள் தான் என்னை வீட்டில் வந்து பார்க்கிறார்கள். பட வாய்ப்பும் வந்து கொண்டே இருக்கிறது  நான் சந்தோஷமாக இருக்கிறேன் என கூறினார்.

Leave a Comment