திருட்டுத்தனமாக பிட்டு படம் பார்த்து மாட்டிக்கொண்டேன்.! உண்மையை ஓபன் ஆக கூறிய அதுல்யா ரவி..

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அதுல்யா ரவி. இவர் கடைசியாக சாந்தனு நடிப்பில் முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக  உள்ளது.

இவர் இழுத்தி போர்த்திக்கொண்டு இருக்கும் குடும்ப பெண்ணாக தான் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆனால் பிறகு பட வாய்ப்புகள் அதிகமாக கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல கிளாமரான படங்களில் நடித்து. ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இவர் வரும் காலத்தில் மிகப் பெரிய நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் இவர் தொடர்ந்து தனது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியீடு தற்போது சர்ச்சை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது உள்ள யூடியூப் சேனல் ஒரு நடிகைகளை கூட விடுவதில்லை.யாரு கிடைத்தாலும் ஏதாவது எடக்கு மடக்கான கேள்விகளை கேட்டு அவர்களிடமிருந்து உண்மையை புடுங்கிவிடுகிறார்கள்.

adhulya ravi

பதில் சொல்ல முடியாத அளவிற்கு மிகவும் மோசமான கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.  அந்த வகையில் அதுல்யா பிரபல யூட்யூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

பல சங்கடமான கேள்விகளை கேட்டு வந்ததால் அதில் அதுல்யா தற்போது சர்ச்சையில் மாட்டி உள்ளார். அந்த வகையில் யூடியூப் தொகுப்பாளர் ஒருவர் முதல் முதலில் நீங்கள் பார்த்த பிட்டு படம் எது? என்று கேட்டதற்கு  அது பிட்டு படமா என்று தெரியவில்லை ஆனால் கல்லூரிப் படிக்கும் போது வகுப்பில் ஆஷிக் பானா என்ற ஹிந்தி பாடல் ஒன்றை என் பெண் தோழிகள் அனைவருடனும் நடு வகுப்பில் உட்கார்ந்து பார்த்தோம்.

இதனை அறிந்த ஆண் நண்பர்கள் கண்டுபிடித்து எங்களைக் கிண்டல் செய்தார்கள் என்று கூறியிருந்தார்.

Leave a Comment

Exit mobile version