மத்தவங்கள நம்ப நல்லா பாத்துகிட்டா அந்த தெய்வம் நம்பள நல்லா பாத்துக்கும்.. நடிகை அபிநயா “அஜித்தை” பற்றி சொன்ன சுவாரஸ்ய தகவல்

Ajith : நடிகர் அஜித்குமார் சினிமா ஆரம்பத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களை சந்தித்து வந்தார் ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் இது எல்லாம் தனக்கு ஒத்து வராது என விலகிக் கொண்டு தான் உண்டு தான் வேலை உண்டு என ஓடிக் கொண்டிருக்கிறார். இருப்பினும் அவரை ரசிகர்களும் சரி மீடியாவும் சரி துரத்திக் கொண்டுதான் இருக்கிறது.

காரணம் அஜித் சினிமாவில் நடிப்பதையும் தாண்டி அவருடைய நல்ல குணம் பலரையும் கவர்ந்து வருகிறது என்பதுதான் உண்மை. நடிகர் அஜித்குமார் துணிவு திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து விடாமுயற்சி திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடிப்பு வருகிறார்.

மனுஷன் இல்ல தெய்வம் என் வீட்டுல கூட விஜயகாந்த் போட்டோ இருக்கும் – கண்கலங்கிய பிரபல நடிகர்

இந்த படம் அடுத்த வருடம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த நிலையில் அஜித்துடன் நடித்த அபிநயா மற்றும் அவரது தந்தை நேர்காணல் ஒன்றில் அஜித்தை பற்றி பேசியுள்ளார்.  அவர் சொன்னது என்னவென்றால்..

நான் அஜித்தின் வீரம் படத்தில் பூங்கோதை கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன் எனக்கு அந்த படத்தில் பெரிய காட்சிகள் இல்லை என்றாலும் அந்த படத்தில் நான் நடித்துக் கொண்டிருக்கும் போது எனது தந்தையுடன் கேரவனில் உட்கார்ந்து இருந்தேன் வெளியே யாரோ தட்டுவது போல இருந்தது. அஜித் பிறகு உள்ளே வந்து I am அஜித் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

விடாமுயற்சி படத்தின் கதை இதுவா.? ஆசிரியராக நடிக்கும் அஜித்

எதுவாக இருந்தாலும் தயங்காமல் என்னிடம் சொல்லுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என அஜித் முன்வந்து சொல்லிவிட்டு போனாராம் இந்த படத்தில் நான் பெரிய நடிகை இல்லை என்றாலும், எனக்காக அஜித் அப்படி கேட்டது எனக்கு பிரமிப்பாக இருந்தது என் தந்தையும் அப்பொழுது வியந்து போனார்.  மேலும் சூட்டிங் ஸ்பாட்டில் அவர் பக்கத்தில் என்னை உட்கார வைப்பார். இதனைப் பேட்டியில் அபிநயாவின் தந்தை கூறி இருக்கிறார்.