அந்த மாதிரி நினைப்பு எனக்கு வந்ததே கிடையாது..! சூரரை போற்று திரைப்படத்தில் சூர்யாவுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்த அபர்ணா பாலமுரளி..!

actress abarna balamurali latest speech for surya age: சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் சூரரைப்போற்று. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி சும்மா வெளுத்து கட்டி விட்டது.

இத்திரைப்படத்தில் சூர்யாவிற்கு தாயாராக நடிகை ஊர்வசி அவர்கள் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் கதாநாயகியாக பிரபல நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.  அபர்ணா பாலமுரளி இதற்கு முன்பாக மலையாள திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார்.

இதை தொடர்ந்து தமிழில் 8 தோட்டா சர்வம் தாளமயம் எனும் இரண்டு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவ்வாறு இவர் நடித்த 2 திரைப்படமுமே மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்.

இந்த நிலையில் இப்படி ஒரு நடிகையை சூர்யாவின் திரை படத்தில் நடிக்க வைப்பது சரியா என பலரும் கேள்வி எழுப்பினார்கள் ஆனால் கேள்வி கேட்டவர்கள் மூஞ்சியில் கரியை பூசும் அளவிற்கு நடிகை அபர்ணா பாலமுரளி இந்த திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிக் காட்டி உள்ளார்.

இந்நிலையில் பிரபல செய்தியாளர்கள் அபர்ணா பாலமுரளியிடம் ஒரு சில கேள்விகளை எழுப்பி உள்ளார்கள். அதில் ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் வயது வித்தியாசம் பற்றிக் கேட்ட பொழுது நடிகை அபர்ணா பாலமுரளி எனக்கு 25 வயது ஆகிறது சூர்யா சாருக்கு நாற்பத்தைந்து வயது ஆகிறது என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் நான் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது பொம்மி என்னும் கதாபாத்திரத்தில் தான் நடித்தேன் ஆகையால் சூர்யா சார் என்னை விட வயதில் மூத்தவர் என்ற நினைப்பு எனக்கு வந்ததே கிடையாது. அதுமட்டுமில்லாமல் அவர் என்னைவிட முதியவர் என்ற உணர்வும் எனக்கு தோன்றவில்லை.

soorarai-potru

Leave a Comment