மாஸ் ஹீரோவாக மாற நினைத்து சினிமாவில் இருந்து காணாமல் போன நடிகர்கள்.! லிஸ்ட்டில் இந்த நடிகரும் இருக்கிறார் பார்த்தீர்களா.!

தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக தன்னுடைய கேரியர் ஆரம்பித்து நல்ல நல்ல திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் திடீரென நானும் மாஸ் ஹீரோவாக மாறுகிறேன் என கூறி தன்னுடைய கேரியரை வீணாக்கிய நடிகர்கள் பற்றிதான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

இதில் முதலாவதாக நடிகர் பிரசாந்த் அவர்கள் உள்ளூர் இவர் விஜய் அஜித் அழிப்பதற்கு முன்பாகவே ஹீரோவாக நடித்து வந்தார். அதுமட்டுமல்லாமல் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இருந்தாலும் தான் ஒரு மாஸ் ஹீரோவாக மாற வேண்டும் என்று தனது வாழ்க்கையை வீணாக்கி உள்ளார்.

prashanth
prashanth

நடிகர் ஜீவா 2003இல் ஆசையாசையாய் அந்தத் திரைப்படத்தில் ஒரு அமைதியான கதாநாயகனாக நடித்த ஜீவா அதன் பிறகு ராம் திரைப்படத்தில் நடித்து அனைவரையும் மிரட்டினார். அதன்பிறகு நடித்த டிஷ்யூம், ஈ, சிவாமனசில்சக்தி போன்ற திரைப்படங்களில் இவர் ஒரு கலக்குக் கலக்கி இருந்தார். பின்னர் நானும் மாஸ் ஹீரோவாக வலம் வர வேண்டும் என்பதற்காக தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம் போன்ற திரைப்படங்களில் நடித்து தனது கேரியரில் வீணாக்கியுள்ளார் என்று தான் கூற வேண்டும்.

jeeva
jeeva

நடிகர் ஜெய் பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக ஒரு கதாபாத்திரத்திற்கு அமைதியாக நடித்து ஆரம்பித்தார், அதன் பிறகு சென்னை 28 நல்ல பெயர் எடுத்தார் அதுமட்டுமல்லாமல் சுப்ரமணியபுரம் என்ற திரைப்படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். நானும் மாஸ் ஹீரோவாக மாறுகிறேன் என்று  வடைகறி, வலியவன், ஜருகண்டி போன்ற திரைப்படங்களில் நடித்து தனது கேரியரை வீணாக்கியுள்ளார்.

jai
jai

பரத் இவர் ஆரம்ப காலத்தில் காதல் என்ற திரைப்படத்தில் நடித்த நான் ஒரு நல்ல நடிகன் என்ற பெயரை எடுத்தார் அதன் பிறகு  எம்டன் மகன், வெயில் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் ஆனால் இவருக்கு என்னாச்சுனு தெரியல நானும் ஒரு மாஸ் ஹீரோவாக மாற வேண்டும் என்பதற்காக பழனி, நேபாளி,ஆறுமுகம், திருத்தணி போன்ற திரைப்படங்களில் நடித்து தனது கேரியரை வீணாக்கியுள்ளார்.

bharath
bharath

ஸ்ரீகாந்த் 2002இல் ரோஜா கூட்டம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் இவர் கூட பூமிகா, ரகுவரன், ராதிகா என மிகப் பெரிய பட்டாளமே நடித்தது. இந்த படத்தின் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது.இந்த படமும் ஒரு சூப்பர்ஹிட் திரைப்படமாக அவருக்கு அமைந்தது.அதன்பிறகு இவர் நடித்த ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, பூ, போன்ற திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கி இருந்தார். ஆனால் அதன் பிறகு இவரும் மாஸ் ஹீரோவாக மாறும் என்று போஸ், துரோகி, போன்ற திரைப்படங்களில் நடித்து தனது வாழ்க்கையை வீணாக்கி உள்ளார்.

srikanth
srikanth

Leave a Comment