வாணி போஜன் அழகில் மயங்கிய நடிகர்கள்.! இரண்டாவது முறையும் வாய்ப்பு கொடுத்த நடிகர்…

சின்னதிரை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பிறகு சீரியல் வாய்ப்பை பெற்றவர்தான் நடிகை வாணி போஜன். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வத்திருமகள் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர்.

அது மட்டுமல்லாமல் இந்த சீரியல் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு மேல் டிஆர்பி யில் டாப்பில் இருந்தது. இதனை தொடர்ந்து சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் தலையாட்டிய வாணி போஜன் அதன் பிறகு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.

ஆனால் இவர் நடிக்கும் படங்களில் இவருடன் நடிக்கும் நடிகர்களுடன் பலமுறை கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். அந்த வகையில் முதலில் நடிகர் ஜெய் உடன் பலமுறை கிசுகிசுக்கபட்டார். அதாவது நடிகர் ஜெய்யுடன் வாணி போஜன் பலமுறை  வெளியில் சென்ற புகைப்படங்கள் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி விரலானது. இதனை தொடர்ந்து ஒரு இயக்குனர் வாணி போஜனிடம் கதை கூறும்போது நடிகர் ஜெய் அவர்கள் அருகாமையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து லாக்கப் படத்தின் போது நடிகர் வைபவ் உடன் வாணி போஜன் கிசுகிசுக்கப்பட்டார்.  அது மட்டுமல்லாமல் அவருடன் நெருக்கமாக இருந்த காரணத்தால் தான் அடுத்த படமான மலேசியா டூ அம்னிசியா பட வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து தெய்வத்திருமகள் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகர் கிருஷ்ணாவுடன் வாணி போஜன் நெருக்கமாக இருப்பதாக கூறப்பட்டது அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் நடிகர் கிருஷ்ணா அவர்கள் வேறொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு நடிகர் பரத்துடன் மிரள் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது இருவரும் நெருக்கமான காட்சியில் நடித்து வருகிறார்கள் என்று கிசுகிசுக்ப்பட்டார் அது மட்டும் இல்லாமல் மிரள் படத்தை தொடர்ந்து அடுத்த லவ் படத்திலும் இவர்கள் இருவரும் நெருக்கமான காட்ச்சியில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும் ஓ மை கடவுளே படத்தில் நடிகர் அசோக் செல்வன் உடன் வாணி போஜன் காதல் கிசுகிசுவில் சிக்கினார் என்று கூறபடுகிறது. இப்படி பலருடன் கிசுகிசுக்கப்படும் நடிகை வாணி போஜன் அவர்கள் எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment